திங்கள், 28 அக்டோபர், 2024

திருமண நாள் வாழ்த்து - கவிதை

கடல் வானைச் சேர்வதும்

வான் கடலைச் சேர்வதும்,

பரிதியை மதி தொடர்வதும்

மதியைப் பரிதி தொடர்வதும்,

கடலைக் காற்று தழுவுவதும்

காற்றைக் கடல்தழுவுவது போல

உருவைத் தொடரும் நிழல்போல

உடலில் கலந்த உயிர்போல

ஒன்றின் ஒன்றாய்க் கலந்து

பல்லாண்டு பல்லாண்டு 

கூடி மகிழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக