ஞாயிறு, 15 மே, 2022

அநீதி

அநீதி கண்டு அமைதி காப்பது குற்றம்.

வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டால் நிமிர முடியாது.

'இளையதாக முள்மரம் கொல்க' என்பதை நினைவில் கொள் 

துணைக்கு யாரையும் தேடாதே.  அவனும் அப்படித்தான். 

உன்நலம் விரும்பிகள் உன்னைத் தடுப்பார்கள்.

அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் அநீதியைத் துரத்தலாம்.


சனி, 14 மே, 2022

ஊக்கம்

மனிதா! 

எதைத் தேடுகிறாய்?

யாரைத் தேடுகிறாய்?

அவசர உலகில்

அனாவசியமாக

நீ உனக்காக உருவாக்கித்

தூக்கிச் சுமக்கின்ற

கவலைகளை, வலிகளை, வேதனைகளை, துன்பதுயரங்களைத் 

தீர்த்துவைக்க தீர்க்கதரிசி வருவாரென்று தேடுகிறாயா?

இறைவனிடம் 

இறக்கி வைத்து விட்டு

இளைப்பாற எண்ணுகிறாயா?

அரசனோ ஆண்டவனோ 

உனக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமோ?

ஊக்கம் கொண்டு

உழைத்தாலே 

உறுதுயர் அழியுமே!

உண்மையை உணராது 

பொய்யில் மயங்கித் திரியாதே!

தமக்கென முயலா 

பிறர்க்கென வாழுநர் உண்மையானே எனும்

பழந்தமிழர் வாழ்முறை அறிக 

கவலை விடுக 

ஊக்கம் உடைமை ஆக்கத்தில் முடியும்!!

உறவுகளின் வாழ்க்கை விடியும்!!!

எழுகதிர் விடியலை 

வரவேற்கத் தயாராயிரு.

புதன், 11 மே, 2022

உயிர்மெய்த் தத்துவம்

'அ'- உயிரெழுத்து
'க்' -மெய்யெழுத்து
அ-உயிர்வளி உள்ளிருந்து எழுவதால் பிறக்கும் எழுத்து-எனவே உயிர் எழுத்து எனப்படுகிறது.
க்-மெய் (உடம்பு) உதவியால் பிறக்கும் எழுத்து. எனவே மெய்யெழுத்து எனப்படுகிறது.
க்+அ=க-உயிர்மெய் எழுத்து. 
இது பிறக்கும் இடம் 'க்' என்ற மெய்யெழுத்தின் இடம்(மார்பு). அ பிறக்கும் இடமான கழுத்தில் பிறப்பதில்லை.

இதன் ஒலிப்பு முயற்சி,
'க்' பிறப்பதற்கான முயற்சியும்+ 'அ'பிறப்பதற்கான முயற்சியும் அடங்கும்.

இதன் வடிவம்,
'க்' மெய் எழுத்தின் வடிவத்தைப் (க) பெற்றிருக்கும்.(அதாவது நமது உடலில் உயிர் கலந்து இருந்தாலும், உயிர் கண்களுக்குத் தெரிவதில்லை. நமது உடல்தான் பிறரது கண்களுக்குத் தெரியும். அதுபோலதான் உயிர்மெய் எழுத்தின் வடிவம் மெய் எழுத்தின் வடிவத்தைப்
பெற்றிருக்கும்)

அ-ஒரு மாத்திரை
க்-அரை மாத்திரை
க-1+1/2=1.5 மாத்திரை வரவேண்டும். ஆனால் நீரில் சர்க்கரை கரைவது போல, உயிர்மெய் எழுத்து உயிரின் மாத்திரையைப் பெறுகிறது. அதாவது மெய்(உடம்பு எழுத்து) உயிரில் கரைகிறது. உயிர் நிலையானது. மெய் (உடம்பு) அழியக்கூடியது. 

தத்துவம்: நமது உடல் கண்ணுக்குத் தெரியும். நமது ஆத்மா அல்லது உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் உடல் அழியும். உயிர் அல்லது ஆத்மாவுக்கு அழிவில்லை. இது தொல்காப்பியம் கூறும் மறைமுகமான செய்தி. 

அன்னையர் தினம்

When someone ask to me...
in my mind says...
Someone: what is your father?
Me: my father is ...  ...  ... 
(Actually acricultural coolly)
My father is Co-GOD.
Someone: what is your mother?
Me: My mother is the GOD

படிக்காத என் தாய் என்னை அதிகாரி ஆக்கி ஆசிரியர் ஆக்கி அழகு பார்த்தார். என்னை அப்படி இரு, இப்படி இரு என்று சொல்லி வளர்க்கவில்லை; என் முன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டுகிறார்.

அன்னையர் தினத்தன்று வாழ்த்துவது வாழ்த்தல்ல.
அனுதினமும் அவரைப் பார்த்துக் கொள்வதே வாழ்த்து.