வரவேற்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரவேற்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

வரவேற்புரை வழங்குபவர் திரு மாரிமுத்து

எங்கள் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்குபவர் திரு. மாரிமுத்து அவர்கள்...


"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா 

நூறு தடவை சொன்ன மாதிரி" 

என்ற ரஜினி ஸ்டைலோடு 

என்றும் பசுமை மாறாமல் 

எங்கள் நினைவில் நிற்பவரே!

அடிப்படைக் கணக்கை 

அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!

ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில் 

போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!

குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் 

வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!

எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !

ஈடு இணை இல்லையே உமக்கு !

காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல 

வள்ளல் கர்ணனின் கொடை போல 

தவமின்றி கிடைத்த வரமே 

எமது சூப்பர் ஸ்டார் 

கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதி காப்பாளர் அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை 

வருக வருக என வரவேற்பதில் 

உள்ளம் மகிழ்கிறோம்.

வரவேற்புரை வழங்குபவர் திருமதி இராஜேஸ்வரி

சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. கலைச்செல்வி அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி அவர்கள்


ஆனைமுகனின் தீவிர பக்தை இவர்!

முகத்தில் புன்னகை நிறைந்த மழலை இவர் !!

மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக 

முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!

முழுமையான அன்பைக் காட்டி,

எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!


கடலில் விளைந்த முத்து போல 

வயலில் விளைந்த நெல்மணி போல

மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!

எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக

வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய 

பெருமைக்கு உரியவர்

எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!

சமூக அறிவியல் ஆசிரியை 

திருமதி. கலைச்செல்வி அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!


வரவேற்புரை வழங்குபவர் திருமதி மு.கடல்கனி

தமிழ் ஆசிரியை திருமதி வயலட் அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி. மு.கடல்கனி அவர்கள்

மணியை ஈன்றதால் மாமலையும்

முத்தை ஈன்றதால் பெருங்கடலும்

அகிலை ஈன்றதால் அடர்வனமும்

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்

பெருமை அடைவது போல

உம்மைத் தமிழ் அன்னையாகப்

பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!


அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ

அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ

தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!

புரியாத இலக்கணத்தை புரிய வைத்த 

இலக்கண வித்தகரே!!!

தமிழ்ப் பாலூட்டி வளர்த்த 

எம் அன்னையே!!!

அர்ச்சுனனின் வில்லைப் போலவும்

கர்ணனின் கவசம் போலவும்

கம்பனின் கவிநயம் போலவும்

வள்ளுவனின் வாக்கு போலவும்

எமக்கு அருள் வாய்த்த தாயே!!!

எம் உயிரே

எம் நினைவே

எம் சுகந்தமே

எம்மை வாழ்வித்த தங்கமே


திருமதி. வயலட் வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பேருவகை கொள்கிறோம்!!!

வியாழன், 5 பிப்ரவரி, 2026

வெள்ளி விழா முனைவர் திருமதி ஆனந்த கனக ஜோதி அவர்களின் வரவேற்புரை வரவேற்புரை

தலைமை ஆசிரியருக்கு வரவேற்புரை - வழங்குபவர் 

முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி அவர்கள் 


பிரபஞ்சம் கதிரவனை

அனுமதித்ததால் 

கருமை விலகி 

நீலவானம் நீண்டு கிடக்கிறது!!!


காற்று தண்ணீரை

அனுமதித்ததால் 

மேகம் திரண்டு 

எழுந்து நிற்கிறது!!!


மேகம் ஒளியை

அனுமதித்ததால் 

வண்ணங்கள் குழைத்து 

'வானவில்' வளைந்து 

கவர்ந்து இழுக்கிறது!!!


நீங்கள் எங்களை (தலைமை ஆசிரியரைப் பார்த்து...)

அனுமதித்ததாலேயே,

தோட்டத்தில் மலர்ந்த 

வாசனை மிகுந்த 

வண்ண மலர்கள் போல

இங்கு நாங்கள் மலர்ந்திருக்கிறோம்!!!



(பின்வரும் ஒவ்வொரு புகழ்ச்சித் தொடருக்கும் இடைவெளி விட வேண்டும். இடைவெளியில் தலைமை ஆசிரியரை நோக்கி சைகை மொழி காட்ட வேண்டும்)


கடமை தவறாத செயல் வீரர் இவர்!!!

கண்ணியம் நிறைந்த பண்பாளர் இவர்!!!

நேர்மை நிறைந்த குணசீலர் இவர்!!!

உருள்பெருந் தேர்க்கு அச்சாணி இவர்!!!

உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கலசம் இவர்!!!

கூர்த்த சிந்தனையில் இவருக்கு நிகர் எவர்?


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 

திரு.S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., அவர்களே !!!

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உங்களை வருக வருக என வரவேற்பதில் 

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!

திங்கள், 8 டிசம்பர், 2025

வரவேற்புரை

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களுக்கு வரவேற்புரை 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் 

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணியப் புலவன் பாரதியின் 

பாடல் வரிகளுக்கு ஏற்ப 

கல்விப் பணியை முதற்பணியாக கொண்டு 

அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்ற 

நமது தமிழக முதல்வரின் கனவுகளை நினைவாக்க 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தந்திருக்கும் 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்கள் நீங்கள் 

கழகத்தின் மணிமுடியில் பதிக்கப்பெற்ற 

ஒளிமிக்க வைரக்கல் நீங்கள்

அறுபத்தெட்டு வயதிலும் இளைஞர் இவர் 

அயராது இடையறாது மக்கள் பணி ஆற்றும் மாணிக்கம் இவர் 

அழகாபுரியில் அவதரித்த சூரியன் 

நான்காம் முறையாக மணிமுடிசூடக் காத்திருக்கும் நாயகன்

அப்பழுக்கற்ற உன்னதமான தலைவர்

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்

திரு. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களை 

வருக வருக என வரவேற்பதில் 

எமது பள்ளி பெருமை கொள்கிறது.

புதன், 9 அக்டோபர், 2024

வரவேற்புரை ஏஆர்ஆர் சீனிவாசன் எம்எல்ஏ

அரசியலில் ஆழங்கால்பட்டவரே

அலைகடல் கூட்டத்தின் நாயகரே


ஆர்ப்பரிக்கும் கடலாய்

இடையறாது மக்கள் பணியாற்றும் கடமை வீரரே


உண்மை நேர்மை உழைப்பின் உறைவிடமே

ஊரெங்கும் சுற்றி வரும் தேரே


எண்ணம் சிதையாமல்

எடுத்த காரியம் குறையாமல்

ஏழையவர் குறைதீர்க்கும் மாமருந்தே


விருதுநகர் பெற்றெடுத்த தங்கமே-மும்முறை

வெற்றியை ருசித்த சிங்கமே


வாழ்நாளெல்லாம் மக்கள் பணியாற்றி வரும் மாமணியே-உம்மை

வருக வருக என வரவேற்பதில் இப்பள்ளி பெருமைகொள்கிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

வரவேற்புரை

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

நகைச்சுவை மருத்துவர் ஞான சம்பந்தனை ஈன்றதால் முத்தமிழும் தமிழ்வளர்த்த மதுரையும் பெருமை கொள்கிறது.

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

அழிவில்லாத மானுடத்திற்கு உள்ளொளி பாய்ச்சுகின்ற உத்தமரே, வருக!


அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்

அடைக்கலம் வேண்டிக் கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள் 

அருந்தமிழோங்கச் சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்

அதுபோல,

அன்னைத்தமிழின் உள்ளம் மகிழ,

ஆற்றாமக்கள் சிந்தை மகிழ,

அருந்தமிழ்ச் சான்றோர் அகமகிழ,

நகைச்சுவை இலக்கியத்தின் நாயகராய்

வருகை தந்திருக்கும்,

இயற்றமிழ் வித்தகரே,

முதற்சுவை தீங்கனியே,

மூன்றாம்தமிழ் நாயகரே!

வருக! வருக!

நற்றமிழ் நாவலரே!

தமிழ் மரபுக் காவலரே!

வருக! வருக!

உவகை கவிஞரே! 

தமிழ் இலக்கியத்தின் சிற்றரசே!

வருக! வருக!

பண்டித மணியே!

கலை மாமணியே!

விருதுக்கு விருதானவரே!

பேராசிரியர்,

மேடைப்பேச்சாளர், 

நூலாசிரியர், 

நேர்முக வர்ணனையாளர், 

தன்னம்பிக்கைப் பேச்சாளர், 

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் 

கலைமாமணி திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களை

வருக! வருக! என வரவேற்பதில் 

மாமதுரைப் புத்தகத் திருவிழா பெருமை கொள்கிறது.


சனி, 25 ஜூன், 2022

கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்

முல்லை நிலக் காவலர்களே...
மூத்தகுடி மக்களே...(2)

வெள்ளாடு மேய்ப்பவர்களே...
வெள்ளை உள்ள வேந்தர்களே...(2)

கால்நடையின் பசி தீர்க்கும் ஆயர்குடியே...
கால்நடையாய்க் கானகம் சுற்றும் வீரர்குடியே...(2)

இயற்கை போற்றும் மனிதர்களே...
இயற்கை வேளாண்மை காக்கும் புனிதர்களே...(2)

உங்கள் வாழ்வும்
உங்கள் குலமும்
உலகம் உள்ளவரை
உயர்ந்து நிற்கட்டும்..! (2)