அன்பே அன்பே
அழகே ஒளியே
அமுதே நீயே
இன்ப ஊற்றே
இளந் தென்றல் காற்றே
இளமை விருந்தே
இசையின் உருவே
நான் வரமாய்ப் பெற்ற
வாழ்வே நீயே
உன்னை வருணிக்கவே
வார்த்தை இல்லையே
அன்பே அன்பே
அழகே நீயே
வெகுளிப் பெண்ணே
வெள்ளை மனமே
கொள்கை கொண்ட
குழந்தைத் தனமே
என்னை வாழ்விக்கவே
வந்த வாழ்க்கைத் துணையே
அன்பே அன்பே
அழகே ஒளியே
தங்க நிறமே
எந்தன் உயிரே
தாரமாய் வந்தாய்
தளிர்நடை பயின்றாய்
தாயாய் மலர்ந்தாய்
உன் தாய்மை அன்பில்
உருகிப் போனேன்
உனக்கே உனக்கே
என்றும் வாழ்வேன்
அன்பே அன்பே
அழகே அமுதே
வரமே நீயே
உன்னைப் பெறவே
என் புண்ணியம் என்னவோ
உன் பாசத்தாலே
நான் நெகிந்தே நெகிழ்ந்தே
உருகிப் போனேன்
உன் அக்கறை கண்டு
நான் அசந்து போனேன்
உன் அழகைக் கண்டு
நான் சொக்கிப் போனேன்
அன்பே அன்பே
அழகை ஒளியே
தங்கச் சிலையே
தாமரை இதழே
மல்லிகை மணம் நீ
தேனின் சுவை நீ
வானின் மழை நீ
மாலைத் தென்றல் நீ
திகட்டாத இன்பம் நீ
எந்தன் உயிரே நீ
எந்தன் உலகம் நீ
எந்தன் வாழ்வே நீ
எந்தன் வசந்தம் நீ
எந்தன் சுகமே நீ
எந்தன் சொர்க்கம் நீ
அன்பே அன்பே
அழகே ஒளியே
என்னை வாழ்விக்கவே
வந்தவள் நீயே
அன்பே அன்பே
அழகே ஒளியே