அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தலைவன்

யார் தலைவன் தெரியுமா?

அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தையும் 

உரிமைகள் இல்லாதவர்களுக்கு உரிமைகளையும் 

பெற்றுத் தருபவனே 

உண்மையான தலைவன். 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

அரசியல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள் 

அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...

உண்மையில், 

அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...

அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...

அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...

ஆகையால்,

அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...

சமூக விலங்காகிய மனிதன் 

எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...

இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...

அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...

அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...

அறிவுடைய மனிதர்கள் குறைவு...

அவர்களின் வாக்குகள் குறைவு...

அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...

ஆக,

அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...

மிஸ்டர் பொதுஜனத்திற்கு 

யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு

யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...

நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...

ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...


அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம். 

சனி, 7 பிப்ரவரி, 2026

அரசியல்

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் போல திரைக்கவர்ச்சி இருக்கு. லஞ்சம் ஊழலால் இருபெருந்திராவிடக் கட்சிகளாலும் எவ்வித நன்மையும் பெறாத, ஏழை எளிய, புறக்கணிக்கப்பட்ட, சோர்ந்துபோன, விளிம்புநிலை மக்கள் தனக்கொரு நல்லகாலம் வரவேண்டும் என்பதையும் தாண்டி, நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கணும்னு சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தான்மட்டும் எப்படியாவது நல்லா இருக்கணும்னு நினைக்காதவர்கள். அதனால்தான் யாரையும் அண்டிப் பிழைக்காமல், எந்தக் கட்சிப் பிரதிநிதியிடமும் உதவி கேட்டு நில்லாமல் தன்மானத்தோடு ஏழைப் பிழைப்பு நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட பொதுமக்களின் கண்களுக்கு நடிகர் விஜய் தலைவராகத் தெரிகிறார். இது அரிதான நிகழ்வு. இதற்கு ஏற்றாற்போல், பொதுமக்களிடம் சென்று நம்பிக்கைகளைப் பெற வேண்டிய அரசியல் கட்சிகள், நடிகர் விஜய்யிடம் சென்று விமர்சித்துக் கொண்டு இருக்கின்றன. பொதுமக்களுக்குப் பகுத்தறிவை விட இறை நம்பிக்கை அதிகம்; அறிவை விட நம்பிக்கை அதிகம். 

சுயநலத்தைவிட பொதுநலம் அதிகம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து!