சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

பகுத்தறிவு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல எல்லை தாண்டி நீண்டிருக்கிறது தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சிகளும் பகுத்தறிவும். விளைவு, வெட்ட முடியாத அளவிற்கு சுயநலமும் இறுமாப்பும் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் கிளைகளாய்ப் பரவியிருக்கின்றன.

சிங்கம் சிங்கம்தான்

எத்தனை காலம் 

தந்திரம் செய்து 

பிழைத்து வந்தாலும்

நரியால் ஒருநாளும் 

சிங்கமாகிட முடியாது 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

சுயபரிசோதனை

இதுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சுயபரிசோதனை மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லா நற்பண்புகளும் ஒழுக்கமும் பகுத்தறிவும் சமத்துவ சகோதரத்துவ சிந்தனைகளும் இவற்றிலிருந்தே பிறக்கின்றன.

காலம்

நல்ல படிப்பினையைத் (அனுபவத்தை)

தந்த இறந்த காலம் 

உண்மையில் இறந்த காலமல்ல... 

அதுவும் நம் எதிர்காலமே...

வெறுப்பு

நெருப்பு விளக்கிலோ அடுப்பிலோ இருந்தால்தான் நல்லது. 

மற்ற இடங்களில் இருந்தால் அழிவு நிச்சயம். 

ஆனால் வெறுப்பு எங்கிருந்தாலும் அழிவு தான்.

சனி, 7 பிப்ரவரி, 2026

வாழ்க்கை

இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்! 


வைததனை இன்சொலாக் கொள்வானும் 

நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் 

ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் 

இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்


கைப்பு - கசப்பு

கட்டி-இனிப்பு

வாழ்க்கை

வைரக்கல் போன்ற வாழ்க்கை இது. பார்வையிழந்தவன் "கருங்கல்" என்று எண்ணித் தூக்கி எறிவது போல் எறிந்துவிடலாகாது.

சுதந்திரம்

இனிய காலை வணக்கம் 


சுயக் கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்!

மற்றவை யெல்லாம் 

மாயை தரும் போதை.

தெளிவு

தெளிந்த வானம்

காட்சிக்குச் சிறந்தது

தெளிந்த நீர் 

பருக ஏற்றது

தெளிந்த மனம்

வாழ்க்கைக்கு நல்லது

துன்பமே இன்பம்


இனிய காலை வணக்கம் 

அஞ்சத் தகுந்த கடலே

அதிசயங்கள் நிறைந்தது!

ஆர்ப்பரிக்கும் அருவியே

அழகு நிறைந்தது!!

கடப்பதற்கரிய நெடுங்காடே

பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!

ஏறுதற்கரிய பெருமலையே 

எழிற்காட்சி தருவது!!!

எனில்,

துன்பத்தைக் கடந்த பின்னே

இன்பமே வந்தெய்தாதோ?

உழவு

இனிய காலை வணக்கம் 

அகல உழுவதை விட

ஆழ உழுவது நன்று

நிலத்திற்குப் பொருந்தும்

பொன் மொழி

மனத்திற்கும் பொருந்தும்.



உறுதி

இனிய காலை வணக்கம் 

மழை பொய்த்த காலத்தில் 

நெற்பயிர் தன்னை

வரகாக மாற்றிக் கொள்ளாது.

மழை மிகுந்த காலத்தில்

வரகு தன்னை

நெற்பயிராக மாற்றிக் கொள்ளாது.

அதுபோல, 

கேடு வந்து உற்ற போதும் 

சான்றோர் தீயோர் ஆகார்.

வாழ்வு வந்து உற்ற போதும் 

தீயோர் சான்றோர் ஆகார்.

உளவியல்

இனிய காலை வணக்கம் 

சூழலியல் உளவியலையும்

உளவியல் நமது வாழ்வியலையும்

நிர்ணயிப்பதால்

சூழலியலை மாற்றுங்கள்!!

அல்லது அதற்கு ஏற்ப

உங்கள் உளவியலை மாற்றுங்கள்!!!

வாழ்க்கை மாறும்!

வாழ்வு மலரும்.!!

தன்னம்பிக்கை

பிறர் ரசிக்கவில்லை என்பதற்காக

மலர்கள் வாடுவதில்லை

பிறர் வரவேற்கவில்லை என்பதற்காக

கதிரவன் இருள்வதில்லை 

பிறர் தூக்கி விடவில்லை என்பதற்காக 

அலைகள் எழாமலில்லை

தன்னை நம்பி

தன்னம்பிக்கை கொண்டு 

மதிப்பை மரியாதையை

பாராட்டை எதிர்பாராமல்

எதிர்நடை போடு


தன்னம்பிக்கை

இனிய காலை வணக்கம் 

சிறகுகளை நம்பி

பறவை உயரப் பறக்கிறது 

துடுப்புக்களை நம்பி

மீன் ஆழ நீந்துகிறது 

கால்களை நம்பி

கானில் மான் ஓடி மறைகிறது 

அதைப் போல 

உன்னை நம்பு

உண்மையை நம்பு

உன் உலகம் 

உன் ஆளுகைக்குள் வரும் 

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை மிகவும் எளிதானது. 

மனிதன் தன் ஆசைகளை அதிகரித்து

வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறான்.

ஒரு கட்டத்தில் வாழ்வின் நோக்கத்தை மறந்து 

வாழும் முறையைக் கைவிட்டு

அடர்வனத்தில் சிக்கித் 

தனித்து துயரும் பேதைபோல் 

கலங்குவான்.

தேவைகளைச் சுருக்கிச் 

சிக்கல்களைக் குறைத்துக் கொள்.

எளிய வாழ்வே இன்பம் தரும்!

எளிய வாழ்வே இறைமை தரும்!!

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை 

சாலைப் பயணம் போன்றது

மேடும் உண்டு 

சரிவும் உண்டு 

அடர்வனமும் உண்டு 

வெட்ட வெளியும் உண்டு 

பாலையும் உண்டு 

பசுஞ்சோலையும் உண்டு 

சுடும் வெயிலிலும் 

பெருமழையிலும் 

கடுங்குளிரிலும் 

தென்றல்காற்றிலும் 

கடுங்காற்றிலும் ஊடறுக்கும் 

சாலைவழித் தடம்போல 

வாழும் வாழ்க்கையில் 

தடம் பதிப்போம்!

களை

களை பறித்த பிறகுதான் 

தோட்டத்திற்குக் களையே (அழகு)

வருகிறது. 

பொறாமை பேராசை

பகை சினம் இவற்றை 

விலக்கிய பின்புதான் 

மனம் அமைதி எய்துகிறது.

முகம் பொலிவாகிறது.

அனுபவம்

கடந்து போன வாய்ப்பு

எதிர்வரும் வாய்ப்பைத்

தவறாமல் பற்றுவதற்கான

கருவி. 

அனுபவம் தந்த பாடத்தை

மறவாமல் இருப்பதே

வெற்றி(க்) காண(ன) வழி!!!

பற்றுறுதி

ஒன்று பிடித்து விட்டால்,

ஒன்றைப் படித்து விடலாம்!

ஒன்றைப் படித்து விட்டால்

ஒன்று பிடித்துப் போகும்!! 

ஒன்றைப் பிடித்துப்போகும் அளவுக்குப்

படித்துச் சுவைக்க வேண்டும்!!! 

பிடிக்காத ஒன்றும் 

படிக்கப் படிக்கப் பிடித்துப் போகும் !!!

படிப்பிலே சுவையுண்டு!

படிப்பவர்க்கே அது சுவைக்கும்.!

அது தனி உலகம் !!

ஏழைக்கும் அது கிட்டும் !!!

எவருக்கும் அதுதரும் சொர்க்கம்.!!!