ஆண்டுவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டுவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

Annual day - model

 


அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம் 

ஆண்டு விழா 2024-2025

நாள்:14-02-2025

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

_________________________________________________________________


கனியிடையே ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர் ! - என்ற பாரதியின் வரிகளில் தமிழன்னையை வணங்கி, வரவேற்புரையைத் துவங்குகிறேன்.

_________________________________________________________________________

தலைமை ஆசிரியருக்கு...

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_________________________________________________________________________




சிறப்பு விருந்தினர் திரு ச. ராஜகுமார் வட்டாட்சியர் அவர்களுக்கு...

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களே! 

வருக! வருக! என வரவேற்கிறோம்.

________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களுக்கு....

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 

மக்கள் யாக்கை இது என உணர்ந்து 

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் -

என்று நல்ல அறத்தையே விரும்பி செயலாற்றி வருகின்ற சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்.

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் திரு. ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு...

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு 

உரிமை உடைத்து இவ்வுலகு- என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழும் சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு. ஜான் எலிசா தேவகுமார் M.TECH அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்

_________________________________________________________________________

ஆசிரியர் பெருமக்களுக்கு...

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________





மாணவன் யஸ்வந்தாமனுக்கு...

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் பெருங்கடலும் 

அகிலை ஈன்றதால் அடர்ந்தகாடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. 

மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________

மாணவச் செல்வங்களுக்கு...

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________________________________________

சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தல்....

சிறப்பு விருந்தினர், விருதுநகர் வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வர்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு.ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களை வரவேற்றல்...

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்....

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களைச் சிறப்புரை வழங்க வரவேற்றல்

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!!!

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வரவேற்றல்...

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_______________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைத்தல்..

நுட்பமான சிந்தனையாளர் 

திட்பமான கொள்கையாளர் 

கூர்த்த அறிவாளர்

தேர்ந்த செயல்வீரர்

மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வாழ்த்துரை 

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

ஏன் தெரியுமா? ...

அது ஒரு காடு. 

'சோ'வென்று மழை பொழிந்து கொண்டிருந்தது.

அப்போது குரங்கு ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது. 

அதைக் கண்ட தூக்கணாங்குருவி, குரங்கிடம் போய், என்னைப்போல் வீடு கட்டிக் கொண்டால், மழையில் நனையாமல் இருக்கலாம் அல்லவா? என்று புத்திமதி சொன்னது.

இதைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. விறுவிறு என்று மரத்தில் ஏறி தூக்கணாங்குருவியின் கூட்டை பிரித்து எறிந்தது. 

இன்றைய இளைஞர்களிடம் நல்லதை கூறுவதற்கே தயங்க வேண்டி இருக்கிறது. 


வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 


சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.


காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.


ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் இருந்த அதே இடத்தில்தான் இருப்பார். 

வேற்றுமைகளை விலக்கு.

வேண்டாததை ஒதுக்கு.


உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்திருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்திருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்திருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ கழுதையாக இருந்திருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. உணர்ந்து கொள்.

உன் பார்வையும் விசாலமாகட்டும். நலம் கிட்டும்.


எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 


ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!


உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி மட்டும் எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.


உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.


உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுவதை அனுமதிக்கலாமோ?. 

ஏனோதானோ என்று வாழ்வைக் கழிக்கலாமோ?


எதற்கும் நீ கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.


கட்டுப்படுத்தப்பட்ட நெருப்புதான் சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டையே அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான். விழிப்புணர்வு கொள்.


படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். 

தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 


கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. கண்டுகொள்.

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. புரிந்துகொள்.


கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.


நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.


நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள் 

நேர்மையை என்றும் துணையாகக் கொள்.


அழுக்கைத் தேக்கி வைக்கும் சல்லடையாக இராதே!

இனிய இசையைத் தேக்கி வைக்கும் புல்லாங்குழலாய் இரு.


அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு 

தராசின் நடுமுள்ளாய் நின்று

தாய்மை அன்போடு எண்ணி

குறைகளைச் சுட்டி 

நிறைகளைக் காட்டி

நிறைவாக நம்பிக்கை ஊட்டி

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள்...

________________________________________________________________________

சிறப்புரை வழங்கும் மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களை வரவேற்றல்...

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

சிறப்புரை வழங்கிய மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றி கூறல்

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

________________________________________________________________________

பரிசளிப்பு விழா 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளிகள் அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். மேலும் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாணவர் யஸ்வந்தாமன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.


அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.சோபியா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.ஹேமலதா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர் எஸ்.கருப்பசாமி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர் ஏ.அரிச்செல்வம். அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு 

கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபாய் 2000 பரிசு வழங்கிப்பாராட்டுகிறார் கணித ஆசிரியர் திரு பி.சுப்பிரமணியன் அவர்கள்.

கணிதப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோரை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.






அரையாண்டுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு


ஆறாம் வகுப்பு அ பிரிவு

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு

ஏழாம் வகுப்பு அ பிரிவு

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு 

ஏழாம் வகுப்பு இ பிரிவு

எட்டாம் வகுப்பு அ பிரிவு

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு 

எட்டாம் வகுப்பு இ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு

பத்தாம் வகுப்பு அ பிரிவு

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு

பத்தாம் வகுப்பு இ பிரிவு

பதினோராம் வகுப்பு A பிரிவு

பதினோராம் வகுப்பு B பிரிவு

பதினோராம் வகுப்பு C பிரிவு

பதினோராம் வகுப்பு D பிரிவு

பதினோராம் வகுப்பு E பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு A பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு B பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு C பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு D பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு E பிரிவு

_________________________________________________________________________

நன்றியுரை வழங்க வரும் தாவரவியல் ஆசிரியரை வரவேற்றல்...

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி உரை வழங்கிய தாவரவியல் ஆசிரியருக்கு நன்றி கூறுதல்

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


கலை நிகழ்ச்சிகள்:

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

"உண்மை ஒளி" நாடகக் குழுவினரை வரவேற்றல்

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

நாடகக் குழுவினருக்கு நன்றி பாராட்டுதல்

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

________________________________________________________________________

நடன நிகழ்ச்சிகள் 

ஆறாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல்...

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவிகள்...

ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஆறாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

அன்பைக் கடன் கொடு. அது அதிக வட்டியுடன் திரும்பி வரும் என்பார்கள். அன்பு நிறைந்த ஆறாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

முதுகுக்குப் பின்னால் செய்ய வேண்டிய ஒரே காரியம், அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாக இருக்கட்டும் என்பார்கள். அழகாக நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


ஏழாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள்...

ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

குலுக்கென்று சிரித்த முல்லை 

மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே -என்ற பாரதிதாசனின் 'சிரித்த முல்லை' கவிதையை நினைவூட்டும் ஏழாம் வகுப்பு மாணவிகளின் நடனத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

ஏழாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

உற்சாகத்துடன் வேலையைத் தொடங்கு. பாதி வேலை உடனே முடியும் என்பார்கள். உற்சாகத்தோடு நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல்

கடவுள் நூலைத்தான் கொடுப்பார். மனிதன் தான் ஆடையை நெய்ய வேண்டும் என்பார்கள். கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாக நடனமாடிய ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


எட்டாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.



எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே 

கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாரே -போல் நடனமாடிய எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

எட்டாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை 

காலம் சோம்பேறியை மதிப்பதில்லை. சோம்பல் இன்றி நடனமாட வருகைதரும் எட்டாம்வகுப்பு மாணவர்களை வரவேற்கிறோம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

ஒழுக்கத்தை விடச் சிறந்த உடை உலகத்தில் இல்லை என்பார்கள். 

ஒழுக்கமுள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை நடனமாட அழைக்கிறோம்...

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகு

ப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

ரோஜா செடியில் முள் இருக்கிறதே என்று முறையிட வேண்டாம். முள் செடியில் ரோஜா இருக்கிறது என்று மகிழ வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்புடன் அழைக்கிறோம். 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

சுயமாக சிந்திக்காத மனிதன் ஒரு அடிமை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


நாட்டுப் பண் சேர்ந்து பாடுதல்


அனைவரும் கலைந்து செல்லுதல்





புதன், 12 பிப்ரவரி, 2025

ஆண்டுவிழா2025

 ஆண்டு விழா வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

____________________________________

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_____________________________________

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் அவர்களே! 

வருக! வருக!

_____________________________________

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________

ஆண்டறிக்கை 

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

---------------------------------------------------

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

---------------------------------------------------

சிறப்புரை

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் __________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர்_______________ அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்!!!

_____________________________________

வாழ்த்துரை

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

வாழ்த்துரை வழங்க வருமாறு___________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய___________அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்...

________________________________

பரிசளிப்பு விழா 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 

நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதலிடம் பிடித்தவர்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்வு.

ஆறாம் வகுப்பு அ பிரிவு_________

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு_________

ஏழாம் வகுப்பு அ பிரிவு__________

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு _________

ஏழாம் வகுப்பு இ பிரிவு__________

எட்டாம் வகுப்பு அ பிரிவு_________

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு _______

எட்டாம் வகுப்பு இ பிரிவு________

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு_____

பத்தாம் வகுப்பு அ பிரிவு_______

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு ______

பத்தாம் வகுப்பு இ பிரிவு________

பதினோராம் வகுப்பு அ பிரிவு___

பதினோராம் வகுப்பு ஆ பிரிவு__

பதினோராம் வகுப்பு இ பிரிவு__

பதினோராம் வகுப்பு ஈ பிரிவு___

பதினோராம் வகுப்பு உ பிரிவு___

பன்னிரண்டாம் வகுப்பு அ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஆ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு இ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஈ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு உ பிரிவு

_______________________________

பேச்சு

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

__________________________________________________

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

நாடகம் 

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

_____________________________________

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_____________________________________

நடனம்

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவர்கள்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்...

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

_______________________________

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட அழைக்கிறோம்...

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

நன்றியுரை

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு__________அவர்களை வரவேற்கிறோம்.

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய______அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________

வாழ்த்துரை

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 

சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.

காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.

ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் அதே உயரத்தில்தான் இருப்பார்.

உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ கழுதையாக இருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. 

உன் பார்வை விசாலமாகட்டும். 

எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 

ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!

உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.

உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.

உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுகிறது. 

எதற்கும் கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.

கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டை அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான்.

படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 

கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. 

கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.

நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.

அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

ஆண்டறிக்கை 2024-2025

 அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்

ஆண்டறிக்கை 2024-2025

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

எழுமையும் ஏமாப்பு உடைத்து


இப்பள்ளி 1956ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பாரம்பரியமிக்க பள்ளி இது. பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளி இது. 

இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முன்னாள் தலைமை ஆசிரியர்களை வணங்கும் நேரமிது.


இப்பள்ளியில் தற்போது 587 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 31 ஆசிரியர்கள், 2 பகுதிநேர ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 1 பதிவறை எழுத்தர் ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது.


கடந்த 2023- 24ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்பில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி எஸ்.ஹேமலதா 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 

மாணவன் எஸ்.கருப்பசாமி 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவன் ஏ.அரிச்செல்வம் 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவர் எம்.யஸ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததோடு சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்தார். 

மாணவி பி.ஷர்மிளா பாண்டி 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவி எஸ்.சோபியா 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கணிதப்பாடத்தில் மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தனர்.


7.5% உள்இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தோர் விவரம்.

மாணவர் கே.கார்த்தீஸ்வரன் கோவை SNS கல்லூரியிலும், 

எல்.சஞ்ஜித் திண்டுக்கல் NPR கல்லூரியிலும், 

மாணவர்கள் எஸ்.கே.சூரியபிரகாஷ், ஏ.அரிச்செல்வம், எஸ்.ஹேமலதா, எம்.முத்துபிரியா ஆகியோர் மெப்கோ பொறியியல் கல்லூரியிலும் 

மாணவிகள் எஸ்.முத்துபிரியா, வி.வினோதினி ஆகியோர் AAA பொறியியல் கல்லூரியிலும் 

மாணவி எம்.நந்தீஸ்வரி கோவை குமரகுரு கல்லூரியிலும் 

மாணவி எஸ்.நிவேதா, ரத்னம் ஸ்கூல் ஆர்கிடெக்சர் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.


7th A மாணவி ஜெ.மிதுனா ஸ்ரீ மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.


அரசு புதிதாக நான்கு வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளது.


நன்கொடையாளர்கள் விவரம்: 

சமர்த்தனம் அறக்கட்டளை நம் பள்ளிக்குக் கழிவறைக் கட்டிடம் கட்டித் தந்துள்ளது.

1983-1985ஆம் ஆண்டுகளில் 12ஆம் படித்த முன்னாள் மாணவர்கள் நான்கு வகுப்பறைக் கட்டடத்தைச் செப்பனிட்டு வண்ணப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005 கல்வியாண்டில் படித்த முன்னாள் 12th B மாணவர்கள் அலுவலகக் கட்டடத்தைப் பழுதுநீக்கி, உள்பூச்சு அடித்துத் தந்தனர்.

1993-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளிப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் புத்தகங்களை அன்பளிப்பு செய்து நூலகக் கட்டடத்தைச் செப்பனிட்டுத் தந்தனர்.

அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழ்வில் அணியாகவும் தாழ்வில் துணையாகவும் அமைவது கல்வி. வாழ்வின் சுவையாக அமைவது கல்வி. அனுபவப்புதையலாக அமைவது கல்வி. நம்மை அடையாளம் காட்டுவது கல்வி. அத்தகு கல்வியை நேசி; நாள்தோறும் புதியவற்றை வாசி; வாசித்தவை பற்றி யோசி; புதிய பொருண்மைகளைக் கூட்டு; நாளை உனது என்பதை நிலைநாட்டு.


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

என்னோற்றான் கொல்எனுஞ் சொல். - என்னும் வகையில் தந்தைக்கும்


ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்- என்னும் வகையில் தாய்க்கும் பெருமை தேடி, பொருள் தேடி, அறம் நாடி, வாழ்வாங்கு வாழ்வீர் என வாழ்த்தி, ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன். நன்றி!