சிறப்பு தின வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு தின வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2026

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தம் புதிய ஆண்டு இது...

புதுமைகள் நிறைந்த ஆண்டு இது...

புதையல்கள் நிறைய புதைந்திருக்கு...

பொக்கிஷத்தை அள்ளிக் கொள்ள,

புதிய புதிய முயற்சிகள் வேண்டும் ...

புத்தம் புதிய வழிகள் வேண்டும் ...

புதிய புதிய நம்பிக்கை வேண்டும் ...

புதிய புதிய சிந்தனை வேண்டும்... 

புதிய நல்ல மனம் வேண்டும் ...

கண்டதையும் கொட்டி வைக்க, 

மனம் ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல...

காற்றைக்கூட அளவுதாண்டி 

ஊதிவிட்டால் உடைந்து விடும்! 

மன அழுத்தம், மனக்கவலை, 

மனச்சோர்வு, மனப்பிரம்மை கொள்ளாமல்,

மன மகிழ்ச்சி, மன நிறைவு, 

மன வலிமை, மன வளத்தை வளர்த்து

மனித வாழ்வின் அத்துணை 

அம்சங்களையும் அனுபவித்து வாழ,

புத்தாண்டு காத்திருக்கு...

எதிர்வரும் காலம் முழுதும் உங்களுக்கு!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டின் முதல் நாள் இன்று 

முதல் அடி

நிதானமாக

கம்பீரமாக 

நம்பிக்கையுடன்

சிறுசிறு இலக்குகளுடன்

சிறு புன்னகையுடன் 

தொடர்ச்சியாக

அயர்ச்சி இன்றி

ஆரவாரமின்றி 

வலுவாக 

முன்னேறிச் செல்வோம்!!!

திட்டமிடு!!!

தெளிந்துசெய் !!!

துணிந்துசெய் !!!

தொடர்ந்துசெய் !!!

புதிய உலகம் 

உனக்காகவே உதயம்!!!

வாழ்த்தும் என் 

அன்பு இதயம்!!!

இனிய புத்தாண்

டு 

வாழ்த்துக்கள்!!!

பொங்கல் வாழ்த்துக்கள்

தித்திக்கும் இனிப்புப் 

பொங்கலைப் போல 

வாழ்க்கையில் இன்பம் 

பொங்கட்டும். !!!

உங்கள் இல்லங்களிலும் 

அன்பே வடிவான 

உங்கள் உள்ளங்களிலும் 

வாழ்வும் வளமும் 

தங்கட்டும்.!!! 


புதன், 30 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துக்கள்

இவ்வினிய தீபத் 
திருநாள் முதல் 
அலட்சிய அசுரன் 
அடியோடு அழியட்டும்! 
சினமென்னும் அரக்கன் 
வெடித்துச் சிதறட்டும் !
பொல்லாத பொறாமை 
பொசுங்கி அழியட்டும் !
பேரிடரில் ஆழ்த்தும் 
பேராசை அழியட்டும் !
அலைபேசி அரக்கன் 
ஆழ்மண்ணில் புதையட்டும்!
வதந்தி அரக்கன் 
உடல்வற்றி அழியட்டும் !
படிப்பறிவின்மை, 
பகுத்தறிவின்மையால் 
விளைந்த 
மயக்கம் என்னும் அரக்கன் 
மண்ணோடு மடியட்டும்!
வெறுப்பு அரக்கன் 
வெந்து அழியட்டும் !
மனக்குழப்பம், அடிமை உணர்வு 
என்னும் அசுரர்களை 
திசையெட்டிலும் கொளுத்துவோம் !!
இல்லமெங்கும் 
மானிடர் உள்ளமெங்கும் 
உண்மை ஒளி பரவட்டும்!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

திங்கள், 28 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துக்கள்

பேதங்கள் ஒழிந்து

நல்லிணக்கம் மலர்ந்து

கீழ்மை அகன்று

அறத்தின்பால் நின்று

அன்பால் கட்டி

அகிலத்தை நடத்தும்

அறிவொளி பரவட்டும்

திக்கெட்டும்.

தமிழன் என்றோ

திராவிடன் என்றோ

பாகுபாடு காட்டும் எண்ணம்

பழந்தமிழர் மரபில் கிடையாது.

சாதிய மத இன பிராந்திய

பாகுபாடு

தமிழர் பண்பாட்டிற்கு

எதிரானது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்பதே தமிழர் பண்பாடு.

அந்த எண்ணம் மேலிட

நம் முன்னோர்களின் 

கடல் ஆளுமையே காரணம்.

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்.

ஒன்றே குலம்

என்னும் கருத்துடையவர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்

என்பது தமிழர் பண்பாட்டின் உச்சம்.

அயலாரை பிறமொழி தேயத்தார்

என்றே அழைத்தனர்.

பாகுபாடு காட்டுவது தமிழர்

மரபன்று. அது

அரசியல் சொல்லாடல்.

மக்களைப் பிரித்தாள்பவரின்

முயற்சிகளே 

ஆரியர் திராவிடர் தமிழர் 

இஸ்லாமியர் கிறித்துவர் 

மேட்டுக்குடி தலித் என்பன.

பாகுபாடு அகலட்டும்

தீப ஒளியில்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இலக்கு என்னும் வயலைத் தேர்ந்தெடுத்து

உழைப்பு என்னும் ஏரால் உழவுசெய்து

நேர்மை என்னும் விதைவிதைத்து

விடாமுயற்சி என்னும் நீர்பாய்ச்சி

தன்னம்பிக்கை என்னும் உரமிட்டு

சோம்பல் என்னும் களைபறித்து

கவனம் என்னும் வேலியிட்டு

வெற்றி என்னும் கனிபறிக்க

2024 அருள்புரியட்டும்!

பொங்கல் வாழ்த்து

கசந்த காலங்கள் கடந்து செல்ல

வசந்த காலங்கள் வந்து வாழ்த்த

நித்திரை கண்டது போதும் - நீ

வெல்லும் காலமே இனி எப்போதும்!

கரும்பு போலவே வாழ்க்கை இனிக்கட்டும்

பொங்கல் போலவே மகிழ்ச்சி பொங்கட்டும்

மஞ்சள் போலவே அழகு பெருகட்டும் 

வாழை போலவே வம்சம் தழைக்கட்டும்

மாவிலைத் தோரணமாய் மங்களம் சேரட்டும்.

ஆசிரியர் தினம்

தந்தையின் அக்கறையும்

தாயின் அன்பும்

இறைவனின் அருளும்

ஓருருவாய் வாய்த்த 

என் ஆசிரியர் சமூகத்திற்கு

அன்பு வணக்கம்!

உள்ளத் தூய்மையும் 

நன்னெறி வாழ்க்கையும் பூண்ட

நீங்கள் நீடுழி நீடுழி

நலம்வாழ இறைவனை வேண்டுகிறேன்!

உண்மை

கண்ணால் காண்பதெல்லாம் 

காட்சி அல்ல- அகக்

கண்கொண்டு காண்பதே காட்சி.

காதால் கேட்பதெல்லாம் 

கேள்வி அல்ல -மனக்

காதால் கேட்பதே ஞானம்

வாயால் பேசுவதெல்லாம் 

பேச்சல்ல -மனத்தில் 

இருந்து பேசுவதே பேச்சு 

திருமண நாள் 

வாழ்க்கைத் துணையாய் வந்து வாய்த்தவளே!

வராத வரமாய்த் துணை நின்றவளே!!

வாழும் காலமெல்லாம் விருந்து சமைத்தவளே !!!

இடைவந்த பிணியறுத்த அருமருந்தே !!!

கடைவந்து கவலை தீர்ப்பாய் ஆரமுதே !!!

அன்பே ! அழகே ! தேவதையே ! 

பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீந்தமிழே!

!!

ஆன்மீகம் 

இந்துக்களுக்கு முஸ்லீம்களுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை. 

யானைகளுக்கு எறும்புகளுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.

இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொதுவானவர். அழிவற்றவர். மேலானவர். ஒருவர். பலர். வடிவினர். வடிவற்றவர். 

இறைவனைத் தன் உள்ளுணர்வால் கண்டுபிடித்தவன் மனிதன். இறைவனைப் பலவாறாகச் சித்தரித்தவன் மனிதன்.

மனத்தால் வழிபடப்பட வேண்டிய இறைவனுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் தோற்றுவித்து, கட்டுக்கதைகளை விதைத்து மனிதரில் பிரிவினை செய்தவன் மனிதன். இறைவனையே பலகூறாக்கிப் பிரித்தவனும் மனிதனே. மனிதரில் மனிதரைப் பிரித்துப் பகைமை வளர்த்தவனும் மனிதனே.

அறிவியல் கலவாத ஆன்மீகம் பயனற்றது. ஆன்மீகம் இல்லாத அறிவியலும் பயனற்றது.

விருப்பு வெறுப்பு இல்லாதவர் இறைவன். அவர் நல்லவர்களுக்கு வாரி வழங்குவதும் இல்லை. தீயோரைத் தண்டிப்பதும் இல்லை. இருவகைத்தார்க்கும் ஒன்றே செய்வார். நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்வதும் இல்லை. கெடுதல் செய்வோர் எல்லாம் கெடுவதும் இல்லை. எவர் மனவலிமை உடையவரோ அவரே வசதியுடன் வாழ்வார். நல்ல மனம் இருந்தும் மனத் திட்பம் இல்லாமல் இருந்தால் அவர் நல்லவராய் மட்டுமே வாழ்வார். நன்றாக வாழ மாட்டார்.

தீய மனம் கொண்டவர் மன உறுதியுடன் வாழ்ந்தால் அவர் கெட்டவராய் (மனம் போன போக்கில் கொடுமைகள் செய்து) இருந்தாலும் வசதியுடன் வாழ்வார். வாழ்வதற்கு மனத் திடம் முக்கியம். அதற்கு இறை நம்பிக்கை உதவலாம். இறை நம்பிக்கை இல்லை என்றால் நுண்ணறிவும் நூலறிவும் வேண்டும்.

வியாழன், 10 அக்டோபர், 2024

சரஸ்வதி பூஜை

வைகறையில் துயிலெழுந்து,

ஓடி முடித்து, களித்து, குளித்து,

அமுதுண்டு, புத்தகங்களை அடுக்கி, 

சந்தனம் குங்குமமிட்டு 

வழிபட்டு வாஞ்சையுடன் முகத்தில் ஒற்றி 

சரஸ்வதியை வரவேற்று வணங்கி 

அடக்கமாகச் சம்மனம் இட்டு உட்கார்ந்து 

ஆசையுடன் படித்த பிள்ளைப்பருவ நாட்கள் 

வாஞ்சையுடன் வருடிச் செல்கின்றன என்னை இந்நாளில்...

புதன், 11 மே, 2022

அன்னையர் தினம்

When someone ask to me...
in my mind says...
Someone: what is your father?
Me: my father is ...  ...  ... 
(Actually acricultural coolly)
My father is Co-GOD.
Someone: what is your mother?
Me: My mother is the GOD

படிக்காத என் தாய் என்னை அதிகாரி ஆக்கி ஆசிரியர் ஆக்கி அழகு பார்த்தார். என்னை அப்படி இரு, இப்படி இரு என்று சொல்லி வளர்க்கவில்லை; என் முன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டுகிறார்.

அன்னையர் தினத்தன்று வாழ்த்துவது வாழ்த்தல்ல.
அனுதினமும் அவரைப் பார்த்துக் கொள்வதே வாழ்த்து.