விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்
விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர்
படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்
காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்
பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்
மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்
காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்
காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்
வியாழன், 30 ஜூன், 2022
காமராஜர் கவிதை
சனி, 25 ஜூன், 2022
கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்
முல்லை நிலக் காவலர்களே...
மூத்தகுடி மக்களே...(2)
வெள்ளாடு மேய்ப்பவர்களே...
வெள்ளை உள்ள வேந்தர்களே...(2)
கால்நடையின் பசி தீர்க்கும் ஆயர்குடியே...
கால்நடையாய்க் கானகம் சுற்றும் வீரர்குடியே...(2)
இயற்கை போற்றும் மனிதர்களே...
இயற்கை வேளாண்மை காக்கும் புனிதர்களே...(2)
உங்கள் வாழ்வும்
உங்கள் குலமும்
உலகம் உள்ளவரை
உயர்ந்து நிற்கட்டும்..! (2)
வெள்ளி, 24 ஜூன், 2022
வாழ்த்துரை
- நீதித் தராசின் நடுமுள்ளே ...! நேர்மையின் சுகம் விரும்பியே ...! (2 முறை)
- பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த ஜீவநதியே-நல்லோர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நாயகரே...!(2)
- கேள்விகளால் வேள்வி பல செய்த வித்தகரே...! குரலற்ற மக்களின் குரலாய் ஒலித்தவரே..! (2)
- விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே...! அநீதிக்குக் கிருபை காட்டாத கிருபாகரரே...! (2)
- தாயிடம் முரண்படும் குழந்தை போல நீதியிடம் சட்டம் முரண்படும்போதெல்லாம் நீதியின் பக்கம் நின்ற சட்டகர்த்தாவே...!(1)
- 7.5% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களின் இன்னல் தீர்த்தவரே...!(1)
- தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தமிழ் மாணவர்களின் நலன் காத்தவரே...!
- வியர்வையின் மதிப்பை உணர்ந்தவரே..!-ஏழையின் உயர்வை உள்ளத்தில் இருத்தியவரே..!(2)
- இயற்கை ஆர்வலரே... சூழல் காவலரே...!(2)
- வாய்மையைக் கடைப்பிடிக்கும் ஒளிர் தங்கமே...! ஒப்பற்ற உம்புகழ் பரவும் எங்குமே!!! (2)
நீர் வாழ்க... உம் குலம் வாழ்க... என்று வாழ்த்தி, இவ்விழாவிற்கு வருக... வருக...என வரவேற்று என் வரவேற்புரையை நிறைவு செய்கிறேன். நன்றி..!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)