ஞாயிறு, 31 ஜூலை, 2022

சுதந்திரத்தை போற்றுவோம் கவிதை

போற்றுவோம் சுதந்திரத்தை... போற்றுவோம் சுதந்திரத்தை...

அனைவரும் கல்வி பெற்றோம்
அருமை உலகின் அறிவு பெற்றோம்(2)

ஆட்சி செய்யத் தேர்தல் வைத்தோம்
ஆளும் பொறுப்பைக் கொடுத்து வைத்தோம்(2)

எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டோம்
எழுத, பேச உரிமை கொண்டோம்(2)

சட்டத்தின் முன் சமமாய் நின்றோம்
சமத்துவமே நீதி என்றோம்(2)

தீமை தரும் தீண்டாமை ஒழித்தோம்
தீண்டாதோர்க்கு ஒதுக்கீடு தந்தோம்(2)

விடுதலை பெற்ற தாய்நாட்டில்,
விரும்பும் கல்வி கற்றிடலாம்
வேண்டிய உயரம் பறந்திடலாம்
விரும்பும் வேலை செய்திடலாம்
பிடித்த ஊரில் தங்கிடலாம்
விரும்பும் தெய்வம் வணங்கிடலாம்
நம்பும் மதத்தைப் பரப்பிடலாம்

தகுதிக்கேற்ற வேலையும் உழைப்புக்கேற்ற ஊதியமும் 
பணியிடத்தில் பாதுகாப்பும் சுதந்திரத்தால் உருவாக்கினோம்.

ஆண் பெண்ணில் வேறுபாடில்லை
சாதி மத பேதமுமில்லை(2)

சகோதரராய் 
சமத்துவ வழியில் சங்கமம் கொள்வோம், வாரீர்!(2)

சனி, 30 ஜூலை, 2022

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பேச்சு போட்டி

அவையோர்க்கும் இங்கே கூடியிருக்கும் சபையோருக்கும் என் அன்பு வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

அவர் மகான் இல்லை- ஆனால் 

உத்தம மனிதர் (2)

அவர் அதிசயம் செய்தாரில்லை -ஆனால்

ஆளுமை மனிதர் (2)

அவர் வசீகர மனிதரில்லை- ஆனால்

கனவுகளைத் துரத்தியவர்(2)


ஆம்.வல்லரசு இந்தியா 

வளமான இந்தியா 

வறுமை இல்லா இந்தியா 

என்ற கனவுகளைத் துரத்திய என் கனவு நாயகன்.

ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம். 

நான் விரும்பும் தலைவர் அவரே!

மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாகச் சேவை ஆற்றிய போதும் எளிமையாகவே வாழ்ந்தவர்.

இரண்டு சூட்கேசுகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே திரும்பினார். கறை ஏதுமில்லாத வெள்ளை மனிதர் 

நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாக மலர்ந்தவர்.

"இளமையில் வறுமை கொடிது" என்பார்கள். வறுமை அவருக்குக் கற்றுத் தந்த பாடம், அவரை,

ஒழுக்க சீலராக்கியது 

உயர்ந்த பண்பாளராக்கியது 

கடின உழைப்பாளராக்கியது. 

அவர் அசைவம் விரும்பாதவர் 

வல்லரசு இந்தியாவை விரும்பியவர்(2)

அவர் திருமணம் புரியாதவர்

எவருக்கும் தீமை புரியாதவர்.(2)

அக்னி, ஆகாஷ், பிருத்திவி என்று ஏவுகணைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஏவுகணை நாயகன்.

அணு வெடிப்புச் சோதனை நடத்திய பொக்ரான் நாயகன்.

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கருதியவர். 

இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தவர். 

இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடையே இந்தியா பற்றிய கனவுகளை விதைத்தவர். 

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலேயே தன் இறுதிக்காலத்தைச் செலவிட்டவர். 

அவரது இறுதி மூச்சிலும் பேச்சிலும் வல்லரசு இந்தியாவின் தீப்பொறி கலந்திருந்தது.

அவர் பழகுவதில் குழந்தை 

சிந்திப்பதில் ஞானி 

மாணவர்களுக்கு நண்பன் 

நாட்டு மக்களுக்கு எளிய வழிகாட்டி

 விமர்சனம் செய்ய முடியாத தலைவர் அவர் 

அவரே நான் விரும்பும் தலைவர் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

திங்கள், 11 ஜூலை, 2022

கல்விப் பணியில் காமராசர் பேச்சுப்போட்டி வகுப்பு 5

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டினி கிடப்பவருக்கே பசியின் கொடுமை புரியும்.

வெயிலில் கிடப்பவருக்கே நிழலின் அருமை தெரியும்.

அதைப்போல,

படிக்க வாய்ப்பு இல்லாத காமராசர் படிப்பின் அவசியம் அறிந்தவர்.

  1. வெள்ளத்தால் போகாது 
  2. வெந்தணலால் வேகாது 
  3. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
  4. கள்ளர்க்கோ பயமில்லை 
  5. காவலுக்கு மிக எளிது 
  6. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைபடாது.- கல்வி.

பசியோடு இருப்பவனுக்கு மீன்பிடித்துத் தருவதை விட, மீன்பிடிக்கக் கற்றுத் தருவதே சாலச் சிறந்தது.

அதுபோல,

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து விட்டால் அவர்களுடைய வாழ்வு மலரும் என்று சிந்தித்தார் காமராசர்.

காமராசர் 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

  1. மூடப்பட இருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார்
  2. ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி
  3. மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
  4. ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டம் வகுத்து பட்டி தொட்டி எங்கும் 17 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
  5. கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார்.
  6. மாணவர்களின் மதியவேளை பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
  7. மாணவர்களுக்கு முறையான தரமான கல்வி கிடைக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.
  8. மாணவர்கள் இடையே ஏழை-பணக்காரர் வேறுபாடுகளை நீக்க இலவசச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  9. பள்ளி வளர்ச்சிக்காக அரசிடம் போதிய நிதி இல்லாத போது, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தி செல்வந்தர்களின் உதவியோடு பள்ளிக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்.
  10. தொழிற்பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
  11. கல்வி கற்ற சமுதாயமே மேம்படும் என்று உறுதியாக நம்பினார்.
  12. கல்வி கற்றோர் சதவீதத்தை ஏழிலிருந்து 37 ஆக உயர்த்தினார்.
  13. காமராசர் அமைத்த அடித்தளத்தில், இன்று வானளாவிய கட்டங்களாக கல்வித்துறை நிமிர்ந்து நிற்கிறது.

அவரின் சீரிய பணிக்குத் தலை வணங்குவோம். அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம். வாரீர்!

நன்றி, வணக்கம்.

காமராசர் பேச்சுப்போட்டி- வகுப்பு 2

இங்கே கூடியிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்ணுக்குள் இருக்கின்ற கரி தான் வெட்ட வெட்ட வைரமாய் மின்னுது. 

அதுபோல, 

    1. ஒருபுறம் வறுமை வாட்ட வாட்ட, 
    2. மறுபுறம் விடுதலை வேட்கை மேலே ஏழ ஏழ, 
    3. இன்னொரு புறம் சிறையில் துன்பம் வருத்த வருத்த, 
    4. தியாகச் சுடராய், வேள்வித்தீயாய், 
    5. நம் தேசத்திற்கு அழியாத விளக்காய் ஒளி தந்தவர் காமராசர்.

  • தமிழகத்தின் தவப் புதல்வர்
  • தாயகம் காத்த புனிதர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப் பங்காளர் என்று பாராட்டப்பட்டவர்
  1. அரசியலைச் சுத்தப்படுத்தியவர்
  2. ஆட்சியில் நேர்மை செலுத்தியவர்
  3. பள்ளிக்கூடங்கள் பல திறந்தவர்
  4. மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர்
  5. வளர்ச்சித் திட்டங்கள் பல தீட்டி, நாட்டை வளப்படுத்தியவர்

  • ஏழை எளியோர் வாழ்வில்  நல்லொளி பாய்ச்சிய நம்பிக்கை நட்சத்திரம்.
  • கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளில், அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம், வாரீர்.
நன்றி! வணக்கம்.