சோம்பல் விலக்கு!
வெட்டுப்படாமல்
வைரம் மின்னுமா?
கசக்கும் மருந்தின்றி
நோய் குணமாகுமா?
உளி படாமல்
கல் சிலையாகுமா?
முத்துக்குளிக்காமல்
முத்தெடுக்க முடியுமா?
முடியாதல்லவா?
நீ சோம்பி இருந்து
என்ன பயன்?
வெட்டுப்படாமல்
வைரம் மின்னுமா?
கசக்கும் மருந்தின்றி
நோய் குணமாகுமா?
உளி படாமல்
கல் சிலையாகுமா?
முத்துக்குளிக்காமல்
முத்தெடுக்க முடியுமா?
முடியாதல்லவா?
நீ சோம்பி இருந்து
என்ன பயன்?
துன்பத்தை வேண்டு
இருட்டைக் காணாதவன்
விடியலை உணர மாட்டான்..!
வெயிலில் வாடாதவன்
நிழலை விரும்ப மாட்டான்..!
துன்பத்தை அறியாதவன்
இன்பத்தில் மகிழ மாட்டான்...!
துன்பமே இன்பத்திற்கான வித்து!
முதலில் துன்பம்...
அதன்பின் பேரின்பம்!
துன்பம் வரின்
கவலை வேண்டாம்...
கலங்காதிரு...
பூட்டைக் கொடுத்தவனிடம்
சாவி நிச்சயம் இருக்கும் ...!
எதிர்கொள் மனமே..!
உன்னால் முடியும் என்று
நம்பிதான்
கடவுள் எனக்கு
நிறைய துன்பம் தருகிறார்.
கடவுள் என்மீது வைத்த
நம்பிக்கையை
வீணாக்க மாட்டேன்...