சனி, 14 செப்டம்பர், 2024

வாகை சூடி

  1. அச்சம் அகற்று 
  2. ஆர்வம் கொள் 
  3. இளமையை உணர். 
  4. ஈட்டி போல் பாய் 
  5. உலகம் சுற்று 
  6. ஊரோடு இணங்கு 
  7. எளிமையாய் வாழ் 
  8. ஏறிச் செல் 
  9. ஐயம் விலக்கு 
  10. ஒன்றே உலகம் 
  11. ஓது ஓது 
  12. ஔவை சொல் கேள் 
  13. கவலை ஒழி 
  14. காது கொடு
  15. கிழக்கு உனக்கே 
  16. கீழ் மேலாகும் 
  17. குறட்பா படி 
  18. கூடி வாழ்   
  19. கெட்டோர் விலக்கு 
  20. கேட்டது கிடைக்கும் 
  21. கையை நம்பு 
  22. கொடுத்து வாழ் 
  23. கோணல் வேண்டாம் 
  24. சபதம் எடு 
  25. சாதித்துக் காட்டு 
  26. சிந்தனையை விரிவாக்கு 
  27. சீற்றம் வேண்டாம் 
  28. சும்மா இருக்காதே 
  29. சூடு சொரணை வேண்டும் 
  30. செருக்கு வேண்டாம் 
  31. சேமித்துப் பழகு 
  32. சைவம் நன்று 
  33. சொற்படி நட 
  34. சோற்றுக்கு உழை 
  35. தமரைப் பெருக்கு
  36. தாமதம் வேண்டாம் 
  37. திடமாயிரு 
  38. தீர விசாரி 
  39. துணிவுகொள் 
  40. தூரம் இல்லை 
  41. தெரிந்து கொள் 
  42. தேடிப்பார் 
  43. தைரியம் வேண்டும் 
  44. தொட்டது விடாதே 
  45. தோகை விரி 
  46. பண்பை வளர் 
  47. பாட்டி சொல் கேள் 
  48. பிதற்றல் வேண்டாம் 
  49. பீடை மற 
  50. புண்ணியம் செய் 
  51. பூமி உனக்கே 
  52. பெருமை கொள் 
  53. பேறு பெறு 
  54. பைசா சேர் 
  55. பொய் சொல்லாதே 
  56. போக்கிடம் தேடாதே 
  57. நன்மை செய் 
  58. நாட்டம் கொள் 
  59. நிலம் தொழு 
  60. நீர் சேமி 
  61. நுட்பம் அறி 
  62. நூல் உருவாக்கு 
  63. நெகிழ்ச்சி வேண்டும் 
  64. நேசம் காட்டு 
  65. நைந்து விடாதே 
  66. நொடியிலும் வாழ் 
  67. நோன்பு பழகு 
  68. மனசாட்சிப்படி வாழ் 
  69. மானம் பெரிது 
  70. மிரண்டு விடாதே 
  71. மீட்சி உண்டு 
  72. முயற்சி வெல்லும் 
  73. மூளையைச் சுத்தமாக்கு 
  74. மெல்லப் பேசு 
  75. மேற்கிலும் உதி 
  76. மொழி அறி 
  77. மோதிப்பார் 
  78. வலிமையை உணர் 
  79. வாய்ப்பைத் தவறவிடாதே 
  80. விடுதலை விரும்பு 
  81. வீறு கொள்
  82. வெற்றி உனதே 
  83. வேடிக்கை வேண்டாம் 
  84. வையம் வாழ்த்தும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

வரவேற்புரை

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

நகைச்சுவை மருத்துவர் ஞான சம்பந்தனை ஈன்றதால் முத்தமிழும் தமிழ்வளர்த்த மதுரையும் பெருமை கொள்கிறது.

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

அழிவில்லாத மானுடத்திற்கு உள்ளொளி பாய்ச்சுகின்ற உத்தமரே, வருக!


அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்

அடைக்கலம் வேண்டிக் கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள் 

அருந்தமிழோங்கச் சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்

அதுபோல,

அன்னைத்தமிழின் உள்ளம் மகிழ,

ஆற்றாமக்கள் சிந்தை மகிழ,

அருந்தமிழ்ச் சான்றோர் அகமகிழ,

நகைச்சுவை இலக்கியத்தின் நாயகராய்

வருகை தந்திருக்கும்,

இயற்றமிழ் வித்தகரே,

முதற்சுவை தீங்கனியே,

மூன்றாம்தமிழ் நாயகரே!

வருக! வருக!

நற்றமிழ் நாவலரே!

தமிழ் மரபுக் காவலரே!

வருக! வருக!

உவகை கவிஞரே! 

தமிழ் இலக்கியத்தின் சிற்றரசே!

வருக! வருக!

பண்டித மணியே!

கலை மாமணியே!

விருதுக்கு விருதானவரே!

பேராசிரியர்,

மேடைப்பேச்சாளர், 

நூலாசிரியர், 

நேர்முக வர்ணனையாளர், 

தன்னம்பிக்கைப் பேச்சாளர், 

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் 

கலைமாமணி திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களை

வருக! வருக! என வரவேற்பதில் 

மாமதுரைப் புத்தகத் திருவிழா பெருமை கொள்கிறது.