தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள்
அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...
உண்மையில்,
அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...
அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...
அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...
ஆகையால்,
அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...
சமூக விலங்காகிய மனிதன்
எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...
இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...
அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...
அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...
அறிவுடைய மனிதர்கள் குறைவு...
அவர்களின் வாக்குகள் குறைவு...
அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...
ஆக,
அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...
மிஸ்டர் பொதுஜனத்திற்கு
யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு
யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...
நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...
ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...
அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக