விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்
விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர்
படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்
காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்
பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்
மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்
காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்
காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்
வியாழன், 30 ஜூன், 2022
காமராஜர் கவிதை
சனி, 25 ஜூன், 2022
கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்
வெள்ளி, 24 ஜூன், 2022
வாழ்த்துரை
- நீதித் தராசின் நடுமுள்ளே ...! நேர்மையின் சுகம் விரும்பியே ...! (2 முறை)
- பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த ஜீவநதியே-நல்லோர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நாயகரே...!(2)
- கேள்விகளால் வேள்வி பல செய்த வித்தகரே...! குரலற்ற மக்களின் குரலாய் ஒலித்தவரே..! (2)
- விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே...! அநீதிக்குக் கிருபை காட்டாத கிருபாகரரே...! (2)
- தாயிடம் முரண்படும் குழந்தை போல நீதியிடம் சட்டம் முரண்படும்போதெல்லாம் நீதியின் பக்கம் நின்ற சட்டகர்த்தாவே...!(1)
- 7.5% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களின் இன்னல் தீர்த்தவரே...!(1)
- தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தமிழ் மாணவர்களின் நலன் காத்தவரே...!
- வியர்வையின் மதிப்பை உணர்ந்தவரே..!-ஏழையின் உயர்வை உள்ளத்தில் இருத்தியவரே..!(2)
- இயற்கை ஆர்வலரே... சூழல் காவலரே...!(2)
- வாய்மையைக் கடைப்பிடிக்கும் ஒளிர் தங்கமே...! ஒப்பற்ற உம்புகழ் பரவும் எங்குமே!!! (2)
நீர் வாழ்க... உம் குலம் வாழ்க... என்று வாழ்த்தி, இவ்விழாவிற்கு வருக... வருக...என வரவேற்று என் வரவேற்புரையை நிறைவு செய்கிறேன். நன்றி..!
ஞாயிறு, 15 மே, 2022
அநீதி
அநீதி கண்டு அமைதி காப்பது குற்றம்.
வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டால் நிமிர முடியாது.
'இளையதாக முள்மரம் கொல்க' என்பதை நினைவில் கொள்
துணைக்கு யாரையும் தேடாதே. அவனும் அப்படித்தான்.
உன்நலம் விரும்பிகள் உன்னைத் தடுப்பார்கள்.
அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் அநீதியைத் துரத்தலாம்.
சனி, 14 மே, 2022
ஊக்கம்
மனிதா!
எதைத் தேடுகிறாய்?
யாரைத் தேடுகிறாய்?
அவசர உலகில்
அனாவசியமாக
நீ உனக்காக உருவாக்கித்
தூக்கிச் சுமக்கின்ற
கவலைகளை, வலிகளை, வேதனைகளை, துன்பதுயரங்களைத்
தீர்த்துவைக்க தீர்க்கதரிசி வருவாரென்று தேடுகிறாயா?
இறைவனிடம்
இறக்கி வைத்து விட்டு
இளைப்பாற எண்ணுகிறாயா?
அரசனோ ஆண்டவனோ
உனக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமோ?
ஊக்கம் கொண்டு
உழைத்தாலே
உறுதுயர் அழியுமே!
உண்மையை உணராது
பொய்யில் மயங்கித் திரியாதே!
தமக்கென முயலா
பிறர்க்கென வாழுநர் உண்மையானே எனும்
பழந்தமிழர் வாழ்முறை அறிக
கவலை விடுக
ஊக்கம் உடைமை ஆக்கத்தில் முடியும்!!
உறவுகளின் வாழ்க்கை விடியும்!!!
எழுகதிர் விடியலை
வரவேற்கத் தயாராயிரு.