புதன், 12 பிப்ரவரி, 2025

ஆண்டறிக்கை 2024-2025

 அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்

ஆண்டறிக்கை 2024-2025

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

எழுமையும் ஏமாப்பு உடைத்து


இப்பள்ளி 1956ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பாரம்பரியமிக்க பள்ளி இது. பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளி இது. 

இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முன்னாள் தலைமை ஆசிரியர்களை வணங்கும் நேரமிது.


இப்பள்ளியில் தற்போது 587 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 31 ஆசிரியர்கள், 2 பகுதிநேர ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 1 பதிவறை எழுத்தர் ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது.


கடந்த 2023- 24ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்பில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி எஸ்.ஹேமலதா 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 

மாணவன் எஸ்.கருப்பசாமி 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவன் ஏ.அரிச்செல்வம் 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவர் எம்.யஸ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததோடு சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்தார். 

மாணவி பி.ஷர்மிளா பாண்டி 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவி எஸ்.சோபியா 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கணிதப்பாடத்தில் மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தனர்.


7.5% உள்இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தோர் விவரம்.

மாணவர் கே.கார்த்தீஸ்வரன் கோவை SNS கல்லூரியிலும், 

எல்.சஞ்ஜித் திண்டுக்கல் NPR கல்லூரியிலும், 

மாணவர்கள் எஸ்.கே.சூரியபிரகாஷ், ஏ.அரிச்செல்வம், எஸ்.ஹேமலதா, எம்.முத்துபிரியா ஆகியோர் மெப்கோ பொறியியல் கல்லூரியிலும் 

மாணவிகள் எஸ்.முத்துபிரியா, வி.வினோதினி ஆகியோர் AAA பொறியியல் கல்லூரியிலும் 

மாணவி எம்.நந்தீஸ்வரி கோவை குமரகுரு கல்லூரியிலும் 

மாணவி எஸ்.நிவேதா, ரத்னம் ஸ்கூல் ஆர்கிடெக்சர் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.


7th A மாணவி ஜெ.மிதுனா ஸ்ரீ மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.


அரசு புதிதாக நான்கு வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளது.


நன்கொடையாளர்கள் விவரம்: 

சமர்த்தனம் அறக்கட்டளை நம் பள்ளிக்குக் கழிவறைக் கட்டிடம் கட்டித் தந்துள்ளது.

1983-1985ஆம் ஆண்டுகளில் 12ஆம் படித்த முன்னாள் மாணவர்கள் நான்கு வகுப்பறைக் கட்டடத்தைச் செப்பனிட்டு வண்ணப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005 கல்வியாண்டில் படித்த முன்னாள் 12th B மாணவர்கள் அலுவலகக் கட்டடத்தைப் பழுதுநீக்கி, உள்பூச்சு அடித்துத் தந்தனர்.

1993-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளிப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் புத்தகங்களை அன்பளிப்பு செய்து நூலகக் கட்டடத்தைச் செப்பனிட்டுத் தந்தனர்.

அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழ்வில் அணியாகவும் தாழ்வில் துணையாகவும் அமைவது கல்வி. வாழ்வின் சுவையாக அமைவது கல்வி. அனுபவப்புதையலாக அமைவது கல்வி. நம்மை அடையாளம் காட்டுவது கல்வி. அத்தகு கல்வியை நேசி; நாள்தோறும் புதியவற்றை வாசி; வாசித்தவை பற்றி யோசி; புதிய பொருண்மைகளைக் கூட்டு; நாளை உனது என்பதை நிலைநாட்டு.


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

என்னோற்றான் கொல்எனுஞ் சொல். - என்னும் வகையில் தந்தைக்கும்


ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்- என்னும் வகையில் தாய்க்கும் பெருமை தேடி, பொருள் தேடி, அறம் நாடி, வாழ்வாங்கு வாழ்வீர் என வாழ்த்தி, ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன். நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக