தகிக்கும் கோடையே - இந்தச்
சூட்டில் எரிந்து கருகும்
இந்த ஏழையின்
ஒடுங்கிய முகத்தைக்
காண மாட்டாயோ!!!
ஒட்டிய வயிறும்
சுருங்கிய தோலும் கண்டுமா
உன் மனம் இரங்கவில்லை...
கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வா...
நான் ...
அடுத்த கோடை வரை
ஆவியாகாமல்
இருக்க வேண்டுமல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக