சின்னச் சின்னப் பூக்கள் போல
சிறகடிக்கும் சிட்டுக்கள் போல
வண்ண வண்ண வானவில் போல
வானில் தவழும் மேகங்கள் போல
எண்ண எண்ண நினைவுகள் எல்லாம்
உள்ளூற ஊருதே
உண்மையான அன்பினில் நெஞ்சம் உருகுதே கரையுதே
அழுது கொண்டே பள்ளிக்கு வந்தோம்
முதல் முதலாய் அன்னையைப் பிரிந்தோம்
யாரோ எவரோ அறியாமல் விழித்தோம்
அன்புக்காக ஏங்கிக் தவித்தோம்
இலக்கணமின்றி உரையாடல் நிகழ
கலக்கம் வந்து நம்மை அலைக்க
ஒருவரை ஒருவர் நண்பராய் ஏற்றோம்
மணக்கும் மஞ்சப்பையே நமது
ஸ்கூல் பேக்காய் ஆனது.
உள்ளே ஒரே ஒரு அட்டை சிலேடு.
அப்பா வாங்கி கொடுத்த
சில மாதங்களிலே
சுற்றி இருந்த பிளாஸ்டிக் கழன்றது.
ஸ்கூல்ல தந்த கல்லு சிலேட்டை
உடையாமல் வச்சுக்கப் பார்த்தோம்.
அதையும் மீறி சக்கைக் கட்டை
உடைஞ்சி போனதுதான் மிச்சம்.
சிலேட்டுக் குச்சியைக் கடனாய்க் கேட்டோம்
சின்னச் சின்னதாய் உடைத்துத் தின்போம்
சாக்பீஸ் தூளே திருநீரு ஆனது
கத்தாளைப் பழமே லிப் ஸ்டிக் ஆனது
பேப்பர் சுருளே பந்தாய் ஆனது
மக்காளச் சோளக் கட்டையும்
சிலேடும்
பேட்டும் பந்தும் ஆயின.
கண்ணாடிப் பாட்டிலே
தண்ணீர்ப் பாட்டில் ஆனது.
குலை குலையா முந்திரிக் காய்,
குளம் கரை,
ஓடிப் பிடிச்சு,
திருடன் போலிஸ்,
படமா எழுத்தா,
கல்லா மண்ணா,
கொட்டான் கொண்டான்,
துவால் கம்பு,
கொட்டை போடுதல்,
நாடு வாங்கி,
கண்டுபிடிச்சு,
கண்ணாமுச்சி,
புள்ளி வச்சு விளையாடுறது,
மடை கட்டி விளையாடுறது,
கோலிக்குண்டு,
பம்பரம் இதெல்லாம் விளையாடினோம்.
ஒன்றாம் வகுப்பு லட்சுமி டீச்சரு...
கம்பால அடிச்சு மண்டை வீங்குனது
இன்னும் ஞாபகம் இருக்கு...
ரெண்டாம் வகுப்பு கணேசன் வாத்தியாரு
ஓட்டை போடுற வாத்தியாரு
காதுலயே நகத்தால ஓட்டை போடுவாரு...
மூன்றாம் வகுப்பு இராமையா சாரு
சட்டை காலரை எப்பவும் தூக்கி விடுவாரு...
நாலாம் வகுப்பு கணபதி டீச்சரு...
ரெம்ப ஸட்ரிக்ட்டு...
நல்லா நடத்துவாங்க...
ஆனால் எனக்கு புரியாது...
அடி நல்லா பிண்ணி எடுப்பாங்க...
அதுபோக மூனு டீச்சரும்
மத்தியானம் மீத கொளம்ப
கூப்பிட்டு தருவாங்க
அதுக்காகவே அவங்க சாப்புடுற
இடத்துக்கு பக்கத்துல சன்னல்
ஓரமா உக்காருவோம்.
பள்ளிக்கூடத்து குழம்புல
எப்போதும் புழு மிதக்கும்.
அத பாத்து வாந்தி எடுப்பேன்
கனவெல்லாம் புழுவா மிதக்கும்.
அஞ்சாம் வகுப்பு அழகேசன் சாரு
..
அன்பு நிறைய காட்டினாரு...
காலையில ஸ்டடி வைப்பாரு...
வாய்ப்பாடு தினமும் சொல்ல வைப்பாரு...
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டாரு
சொல்லித் தந்தாரு...
ஆறாம் வகுப்பு தமிழ்ச் செல்வி டீச்சரு...
ரெம்ப கண்டிப்பானவரு...
அழகான லோலாக்கு தொங்கும்
நல்லா பாடம் நடத்துவாங்க...
நல்லா அடிப்பாங்க...
எங்க அப்பா மொத முறையா
பள்ளிக்கூடம் வந்தாங்க
அப்போ நான் நல்லா பிடிக்கிறதா
டீச்சரு எங்க அப்பாகிட்ட சொன்னாங்க
நிஜமாவே அப்போதான் நான்
வாசிக்க கத்துக்கிட்டேன்.
சமூக அறிவியல் சண்முக ராஜேஸ்வரி டீச்சர் அமைதியானவங்க...ரெம்ப அன்பானவங்க...
எனக்கு ரெம்பப் பிடிக்கும்.
இப்ப வரைக்கும் என் மனசுல குடியிருக்காங்க...
ஆனால் அவங்க இப்ப
உயிரோட இல்லை...
எப்ப எந்த சந்தேகம் கேட்டாலும்
திரும்ப திரும்ப சொல்லித் தருவாங்க...
நான் திரும்ப திரும்ப கேட்பேன்...
கொஞ்சம்கூட அவங்க மறுத்த தில்லை...
ஏழாம் வகுப்பு கோவிந்தராசன் சாரு,
வீட்டுப்பாடம் நிறைய தருவாரு...
பாடம் நடத்தி, உடனே கேள்வி கேப்பாரு
வரிவரியா கேள்வி எடுத்து எழுதச் சொல்லுவாரு...
கேள்வி கேட்கும் ஞானம் அவரால தான் வளர்ந்தது.
பதில் தெரியாதவங்கள
பதில் சொல்றவங்க தலையில கொட்டணும்...
அதுக்காகவே நான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன்
இருக்குறதிலேயே நான் தான் சின்ன பையன். குட்டையா இருப்பேன்...
பதில் சொல்லி நல்லா கொட்டுவேன்.
சின்ராசு சாரு,
பேரக் கேட்டாலே ஸ்கூலே அதிரும்.
தமிழ் எடுத்தார்.
அக்கறை உள்ளவர்
அறிவுரை சொல்பவர்
முருகானந்தம் சாரு
அஞ்சாம் வகுப்பு கணக்கு எடுத்தவரு
ஏழாம் வகுப்புல அடி பிண்ணி எடுத்தாரு
அடி வாங்காம இருக்கணும்னு
எல்லாரும் நல்லா படிச்சாங்க
கம்பு ஒடிய ஒடிய அடிப்பாரு...
கூட்டல் கழித்தல் விதிகளை மனப்பாடம் செய்ய வைச்சாரு...
வகுத்தல் வர்க்கம் வர்க்க மூலம்
எல்லா கடின கணக்கையும் சூப்பரா சொல்லி தருவாரு
ஒரே கணக்க பல மெத்தேடுல
சொல்லித் தந்தாரு..
சார்ட் கட் கண்டிப்பாக இருக்கும்
ஃபார்முலா மறந்தா அடி விழும்
மறதிக்கு மருந்து அடி, அடிதான் டானிக் என்பாரு.
சயின்ஸ் சார்
அவர் பேரு மறந்திடுச்சு...
நல்லா நடத்துவாரு...
ஆனா அக்கறை காட்ட மாட்டாரு
யாரு படிச்சா என்ன
படிக்கலன்னா என்ன என்று இருப்பாரு...
டீச்சரா இருந்தாலும் சாரா இருந்தாலும் பையங்கள மட்டும் தான் அடிப்பாங்க. கேள்ஸ அடிக்க மாட்டாங்க...
சத்திய நேசன் கெச்எம்...
தரமான கெச் எம்...
கெச்எம்மும் முருகானந்தம் சாரும் பள்ளிக்கூடத்தை பயங்கர ஸ்ட்ரிக்ட்டா வச்சிருந்தாங்க...
ஸ்டடி அமைதியாக நடக்கும். யாரும் லேட்டா வர முடியாது. மைக் ஸ்பீக்கர் வாங்கினாங்க.
தண்ணீர் தொட்டில முதல் முறையாக தண்ணீர் வர ஆரம்பிச்சது.
அதுக்கு முன்னாடி வரை
நான் தட்டை நாக்காலேயே கழுவுவேன்
இல்லைனா பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்குற தண்ணீர் பைப்ல வாய் வச்சி உறிஞ்சி தண்ணீர் வர வச்சு கழுவுவேன்.
தட்டை கழுவ தெரு தெருவா அலைஞ்சேன்
இந்த விஷயத்துல அந்த ஊர்க்காரங்க
ரெம்ப மோசம்...
தண்ணியே தர மாட்டாங்க...
தண்ணிக்காக ரெம்ப கஷ்டப்பட்டேன்...
கீழ கெடந்த குவாட்டர் பாட்டில
கழுவி தண்ணி கொண்டு போவேன்.
பல தடவ அது உடைஞ்சு போயிருச்சு...
இத இங்க நிறுத்துறேன்.
இங்கிலீஷ் டீச்சர் தேவி டீச்சர்...
கிராமர் சூப்பரா நடத்துவாங்க...
பொறுமையானவங்க...
ரெம்ப அன்பானவங்க...
அக்கறையானவங்க...
புரியாத இங்கிலீஷ் இவங்களாலதான்
புரிஞ்சது...
அறிவியலும் இவங்கதான் நடத்துவாங்க...
ரெம்ப நல்ல டீச்சர்...
எனக்கு ரெம்ப நேரம் உட்காந்திருந்து
திடீர்னு எழும்போது
சொளப்புன்னு விழுந்திடுவேன்...
எனக்கு சத்து குறைவுன்னு சொன்னார்...
நல்லா சாப்பிட சொன்னாங்க..
ஒருமுறை பச்சை பால குடிச்சிட்டு
ஸ்கூலுக்கு போயிட்டேன்...
வயித்தால போயி அரை மணி நேரம் லேட்டா வந்தேன்...
அத பத்தி கேட்டாங்க
நான் சொன்னேன்...
பச்சைப் பால் குடிக்க கூடாதுன்னு
சொன்னாங்க...
அப்போ லூயி பாஸ்டர் பத்தியும்
பாஸ்டுரைஷேசன் பத்தியும் சொல்லிக்
கொடுத்தாங்க...
வண்டில இருந்து வர்ற புகை மணத்துச்சுன்னா
அவுங்களுக்கு ரத்தம் கம்மியா இருக்கும் என்று சொன்னாங்க...
இப்படி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பாடம் நடத்துவாங்க...
ஒன்பதாம் வகுப்பு வைதேகி டீச்சர்...
நல்லா நடத்துவாங்க..
அன்பா இருப்பாங்க...
ஆனால் மனசுல பதியிற மாதிரி எதுவும் இல்லை...
ஒன்பதாம் வகுப்பு இங்கிலீஷ் டீச்சர் மங்கையர்க்கரசி...
ஓவர் சீனு...
லைப்ப என்ஜாய் பண்ணணும்பாங்க...
அக்கறை இல்லாதவங்க...
நல்லா நடத்தமாட்டங்க...
டெஸ்ட் சும்மா பாத்து பாத்து எழுதலாம்...
இங்கிலீஷ் கொஸ்டீன் ஆன்சர் ஒப்பிக்கனும்...
அரைகுறையா சொல்லலாம்...
யாரு முதல்ல ஒப்பிக்கிறாங்களோ
அவங்ககிட்ட மத்தவங்க ஒப்பிக்கணும்...
அவ்வளவுதான்...
அந்த வருசம் வேஸ்ட்...
கணக்கு எடுத்தவங்க யாருன்னு மறந்து போச்சு...
அந்த அளவுக்கு நல்லா நடத்தல...
சமூக அறிவியலும் அப்படித்தான்...
ஒன்பதாம் வகுப்பு வைதேகி டீச்சர தவிர எல்லோரும் வேஸ்ட்...
பத்தாம் வகுப்பு தமிழ் ஐயா...
முதல் மாதத் தேர்வு...
அக்கறை கொஞ்சமும் இல்லாதவர்
நல்லா நடத்த மாட்டார்...
இப்பவும் இருக்கிறார்...
பேச்சு போட்டிக்கோ கட்டுரை போட்டிக்கோ எப்போதும் தயார் செய்தது கிடையாது.
ஒரு கசப்பான அனுபவம் உண்டு..
எட்டாம் வகுப்பு படிக்கும் போது
முதல் முறையாக பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்...
முன்னுரை மட்டுமே சொல்லி முடித்து தடுமாறிய போது
தட்டிக் கொடுப்பதாக நினைத்து
வலிக்கும் அளவு முதுகில் அடித்து விட்டார்.
அன்று அவமானப்பட்ட நான்
அதன் பிறகு எப்போதும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதே இல்லை... இப்போது வரை...
இங்கிலீஷ் தேவி டீச்சர்...
பொற்காலம் மீண்டும் வந்தது..
அவர்கள் அறிவியலும் நடத்தினார்கள்...
கூடவே புதிதாக வயலட் டீச்சர் வந்தாங்க...
பொற்காலத்தின் உச்சம் அது...
நல்லா நடத்தினாங்க...
இலக்கணம் பிரிச்சு மேஞ்சாங்க...
ஈசியா புரிய வச்சாங்க...
சொல்லை பிரித்து பொருள் அறிவது
பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பு மொழித்திறன் எல்லாம் அத்துப்படி...
எக்ஸ்ட்ரா கிளாஸ் ஸ்டடி ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் வச்சாங்க...
ஞாயிற்றுக்கிழமை கூட லீவு கிடையாது.
ஆனால் கலர் டிரஸ் போட்டுக்கலாம்...
ஸ்டடில நானும் முத்துராசும் பாடம் நடத்துவோம்...
இப்ப வரைக்கும் அக்கறை கொண்டவங்க...
பத்தாம் வகுப்பு முடிச்சதும் என்னை இங்க படிக்காத... என்று சொல்லி அன்னப்பராஜா ஸ்கூல்ல சேத்துவிட்டாங்க...
ஆனால் நான் பயந்துட்டு இருபதுநாள்ல அந்த பள்ளிக்கூடத்த விட்டுட்டு கிருஷ்ணாபுரம் நாடார் ஸ்கூல்ல சேந்துட்டேன்.
பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு வெட்னரி காலேஜ் அப்ளிகேஷன் டீச்சர் ட்ரெயினிங் அப்ளிகேஷன் வாங்கி போட வச்சாங்க...
அவுங்களால தான் நான் டீச்சர் ட்ரெயினிங் படிச்சேன்...
பெரியம்மா பையன் தர்மலிங்கம் அண்ணன் என்னை கவுன்சிலிங் கூட்டிட்டு போயி வானரமுட்டி டயட் செலக்ட் பண்ணினாங்க...
டீச்சரா வேற ஸ்கூல் போயிட்டிங்க..
அதுக்கு அப்புறம் டீச்சர் கிட்ட தொடர்பு கட் ஆயிடுச்சு...
அவங்கள தேடி போகல...
என் அண்ணன் ஜெயச்சந்திரன் மேரேஜ்க்கு வந்தாங்க... அப்புறம் தான் தொடர்பு கிடைச்சது...
அப்போ அப்போ பேசுவாங்க...
என் மேரேஜ்ஜுக்கு வந்தாங்க...
என் பாப்பா பிறந்ததுக்கு கொஞ்சம் நாள் கழிச்சு வந்தாங்க...
இப்போ நாங்க முன்னாள் ஆசிரியர்களை வரவழைச்சு விழா நடத்தப் போறோம்.
கணக்கு சாரு... பேரு ஞாபகமில்லை...ஊசி மூக்கு வாத்தியாரு... கண்ணாடி போட்டுருப்பாரு...
நோட்ஸ் வச்சுத்தான் கணக்கு நடத்துவாரு...
கணக்கு நோட்ஸ் வாங்க சொன்னாரு...
அவரு நடத்துறது புரியாது...
அவருக்கு நடத்த தெரியாது...
சமூக அறிவியல் டீச்சர் கலைச்செல்வி டீச்சரு...
அன்பானவர்
அக்கறையானவர்...
படிக்கத் தெரியாத மாணவர்கள் தான் அவங்க டார்கெட்...
அவங்கள பக்கத்துல உட்கார வச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக் கொடுப்பாங்க...
ஆனை முகனே
ஆதி முதல் ஆனவனே
மோனைப் பொருளே
மூத்தவனே
கணேசா ஏன் என்று கேளுமையா
இந்த ஏழை முகம் பாருமையா என்று
விநாயகர் வாழ்த்து பாட வச்சவங்க...
தீவிர விநாயகர் பக்தை..
எக்ஸாம்க்கு முன்னாடி விநாயகர கும்பிட்டு வழி அனுப்பி வச்சாங்க...
கடின உழைப்பாளி...
ஆனால் மூட்டு வலியால அவதிப்பட்டாங்க...
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக