ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே
உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே
உன் அன்பை காட்டி நீ
என்னைத் தின்றவளே
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உன் அக்கறை என்னையே
என்னவோ பண்ணுதே
என்னவோ பண்ணுதே
உயிரையே தின்னுதே
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ
என் உள்ளம் தடுமாறுதே
உன் அளவுக்கு என்னால்
உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே
குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்
உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்
உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன்
உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உன்னைத் துணையாகப் பெறவே நான்
என்ன தவம் செய்தேனோ
உன் அன்பைப் பெறவே நான்
என்ன கொடுத்து வைத்தேனோ
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
வண்ணம் தீட்டாத ஓவியமே
இன்பம் கூட்டும் அமுதக் கலசமே
தேன்மழைச் சாரலே
பூமணத் தென்றலே
அழகொளிரும் அலங்காரத் தேரே
உன்னை துணையாகப் பெறவே
என்ன தவம் செய்தேனோ
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக