அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
உணர்ச்சித் தீப்பிழம்பே
ஊக்கம்தரும் நற்றமிழே
எழில்மிகுந்த இயற்றமிழே
ஏற்றமுள்ள நாடகமே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
உன் உதிரத்திலே உதித்தேன்
உன் மடியினிலே தவழ்ந்தேன்
உன் அருகினிலே நடந்தேன்
உன் ஆற்றல்தனை வியந்தேன்
உன் அரவணைப்பில் வளர்ந்தேன்
நீ சுவை குன்றாத தேன்
உன்னால் தானே தலைநிமிர்ந்தேனே
தாயே தமிழே உன்னை மறவேனே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
கட்டிக் கரும்பே நீ
கதிர் தரும் ஒளியே நீ
கன்னித் தமிழே நீ
கணினித் தமிழே நீ தானே
சங்கத் தமிழே நீ
தங்கத் தமிழே நீ
நீதி நூலாய் நிமிர்ந்தாய் நீ
நெற்றிக் கண்களைத் திறந்தாய் நீ
பக்தித் தமிழாய் நீ
பாகுபாடு களைந்தாய் நீ
காப்பியப் பொருள்கள் தந்தாய் நீ
கவிச் சுவை இன்பம் தந்தாய் நீ
தனித்தனிப் பாடல்கள் தந்தாய் நீ
தனித்தன்மை கொண்டு வளர்ந்தாய் நீ
புதுப்புது யாப்பு தந்தாய் நீ
புதுப்புது இலக்கியங்கள் தந்தாய் நீ
புதுப்பொலிவே நீ புத்துணர்வே நீ
கடலைத் தாண்டி வானம் தீண்டி வளர்ந்தாய் நீயே
உலகினில் மூத்த முத்தமிழே
உலகம் முழுவதும் உன் ஆட்சியே
உள்ளம் மகிழும் அமுதக் காட்சியே
உயிரில் கலந்த அருள்மிகு மாட்சியே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
உன் பெருமை கண்டு வியக்கிறேன்
உன் அருமை கண்டு மயங்குகிறேன்
உன் ஆற்றல் கண்டு பிரமிக்கிறேன்
உன் காலடியில் என்னைச் சமர்ப்பிக்கிறேன்
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக