சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி DMLT., PCP., அவர்கள்
வெள்ளை உள்ளம் கொண்ட
அன்புத்தாய் இவர்!!
நேசமும் நெருக்கமும் காட்டுவதில்
அன்னை தெரேசாவுக்கு நிகர் இவர்!!
முகத்தில் புன்னகை தவழும் மழலை இவர் !!
மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக
முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!
முழுமையான அன்பைக் காட்டி,
எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!
கடலில் விளைந்த முத்து போல
வயலில் விளைந்த நெல்மணி போல
மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!
எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக
வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய
பெருமைக்கு உரியவர் நீங்கள்!!!
எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!
சமூக அறிவியல் ஆசிரியை
திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களே
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உம்மை வருக வருக என வரவேற்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக