தலைமை ஆசிரியருக்கு வரவேற்புரை - வழங்குபவர்
முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி அவர்கள்
பிரபஞ்சம் கதிரவனை
அனுமதித்ததால்
கருமை விலகி
நீலவானம் நீண்டு கிடக்கிறது!!!
காற்று தண்ணீரை
அனுமதித்ததால்
மேகம் திரண்டு
எழுந்து நிற்கிறது!!!
மேகம் ஒளியை
அனுமதித்ததால்
வண்ணங்கள் குழைத்து
'வானவில்' வளைந்து
கவர்ந்து இழுக்கிறது!!!
நீங்கள் எங்களை (தலைமை ஆசிரியரைப் பார்த்து...)
அனுமதித்ததாலேயே,
தோட்டத்தில் மலர்ந்த
வாசனை மிகுந்த
வண்ண மலர்கள் போல
இங்கு நாங்கள் மலர்ந்திருக்கிறோம்!!!
(பின்வரும் ஒவ்வொரு புகழ்ச்சித் தொடருக்கும் இடைவெளி விட வேண்டும். இடைவெளியில் தலைமை ஆசிரியரை நோக்கி சைகை மொழி காட்ட வேண்டும்)
கடமை தவறாத செயல் வீரர் இவர்!!!
கண்ணியம் நிறைந்த பண்பாளர் இவர்!!!
நேர்மை நிறைந்த குணசீலர் இவர்!!!
உருள்பெருந் தேர்க்கு அச்சாணி இவர்!!!
உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கலசம் இவர்!!!
கூர்த்த சிந்தனையில் இவருக்கு நிகர் எவர்?
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்
திரு.S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., அவர்களே !!!
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உங்களை வருக வருக என வரவேற்பதில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக