செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

பகுத்தறிவு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல எல்லை தாண்டி நீண்டிருக்கிறது தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சிகளும் பகுத்தறிவும். விளைவு, வெட்ட முடியாத அளவிற்கு சுயநலமும் இறுமாப்பும் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் கிளைகளாய்ப் பரவியிருக்கின்றன.

தலைவன்

யார் தலைவன் தெரியுமா?

அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தையும் 

உரிமைகள் இல்லாதவர்களுக்கு உரிமைகளையும் 

பெற்றுத் தருபவனே 

உண்மையான தலைவன். 

சிங்கம் சிங்கம்தான்

எத்தனை காலம் 

தந்திரம் செய்து 

பிழைத்து வந்தாலும்

நரியால் ஒருநாளும் 

சிங்கமாகிட முடியாது 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

மனைவி

அன்பே அன்பே 

அழகே ஒளியே

அமுதே நீயே

இன்ப ஊற்றே 

இளந் தென்றல் காற்றே 

இளமை விருந்தே

இசையின் உருவே

நான் வரமாய்ப் பெற்ற

வாழ்வே நீயே

உன்னை வருணிக்கவே

வார்த்தை இல்லையே


அன்பே அன்பே 

அழகே நீயே

வெகுளிப் பெண்ணே

வெள்ளை மனமே

கொள்கை கொண்ட

குழந்தைத் தனமே

என்னை வாழ்விக்கவே 

வந்த வாழ்க்கைத் துணையே


அன்பே அன்பே 

அழகே ஒளியே 

தங்க நிறமே

எந்தன் உயிரே 

தாரமாய் வந்தாய் 

தளிர்நடை பயின்றாய் 

தாயாய் மலர்ந்தாய்

உன் தாய்மை அன்பில்

உருகிப் போனேன்

உனக்கே உனக்கே

என்றும் வாழ்வேன் 


அன்பே அன்பே 

அழகே அமுதே

வரமே நீயே

உன்னைப் பெறவே

என் புண்ணியம் என்னவோ

உன் பாசத்தாலே 

நான் நெகிந்தே நெகிழ்ந்தே

உருகிப் போனேன் 

உன் அக்கறை கண்டு 

நான் அசந்து போனேன் 

உன் அழகைக் கண்டு 

நான் சொக்கிப் போனேன் 


அன்பே அன்பே 

அழகை ஒளியே

தங்கச் சிலையே

தாமரை இதழே

மல்லிகை மணம் நீ

தேனின் சுவை நீ

வானின் மழை நீ

மாலைத் தென்றல் நீ

திகட்டாத இன்பம் நீ

எந்தன் உயிரே நீ

எந்தன் உலகம் நீ

எந்தன் வாழ்வே நீ

எந்தன் வசந்தம் நீ

எந்தன் சுகமே நீ

எந்தன் சொர்க்கம் நீ

அன்பே அன்பே 

அழகே ஒளியே 

என்னை வாழ்விக்கவே 

வந்தவள் நீயே

அன்பே அன்பே 

அழகே ஒளியே

வெள்ளி விழா விழிப்புணர்வு பாடல்

நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


நல்லது கெட்டது அறிந்தவன் நீ

நாலு விவரம் தெரிந்தவன் நீ

நாற்பது வயதைக் கடந்தவன் நீ

நாசூக்காக சொல்லுறேன் கேட்டுக்க நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


அழகான குடும்பம் உனக்கிருக்கு

பழகிய சமூகத்தில் மதிப்பிருக்கு

நீ செய்வ தெல்லாம் உன் குடும்பம் பார்த்திருக்கு

வேண்டாத வம்பிருந்தால் நீ விலக்கு


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


பொறுப்புகள் கடமைகள் நிறைந்தவன் நீ

வெறுப்புகள் இருந்தால் விலக்கிடு நீ

தாழ்வான எண்ணத்தைத் தவிர்த்திடு நீ

பள்ளிக்காலக் காதலை நீ

அழகான கனவென்று கடந்து வா நீ

அழகான கனவென்று கடந்து வா நீ 

தனிமரம் இல்லை நீ

தலைமுறை நீயே

உன் பொறுப்பை உணர்ந்து செயல்படு நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


உணர்ச்சி நெருப்புக்கு உருவம் கொடாதே 

கடந்த காதலைக் காயப்படுத்தாதே 

அழகான வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே

அர்த்தமுள்ள வாழ்வைக் கெடுத்துவிடாதே

நல்லது சொல்லுறவன் உன் நண்பன் 

நல்லபடி கேட்டுக்கிட்டா நீயே என் நண்பன் 


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே

அதிரத்னா

அதி அதி அதி அதிரத்னா 

ஒளி ஒளி ஒளி ஒளிரத்னா 

ரத்தினம் நீ

மாணிக்கம் நீ

வைரம் நீ

உன் அங்கமெல்லாம் தங்கம்

நீ இருக்குமிடமெல்லாம் மகிழ்ச்சி தங்கும்

நீ வளர்ந்து வரும் சிங்கம்

உன் பெருமை விளங்கும் எங்கும்

நீ இமயம் தீண்டி உயர வேண்டும் 

நீ வானம் தாண்டி பறக்க வேண்டும் 

உனக்கே தனி உலகம் படைக்க வேண்டும் 

தரணியை நீயே காக்க வேண்டும் 

அதி அதி அதி அதிரத்தினம்

ஒளி ஒளி ஒளி ஒளிரத்தினம்

மனைவி

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

தமிழே

அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உணர்ச்சித் தீப்பிழம்பே

ஊக்கம்தரும் நற்றமிழே

எழில்மிகுந்த இயற்றமிழே

ஏற்றமுள்ள நாடகமே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் உதிரத்திலே உதித்தேன்

உன் மடியினிலே தவழ்ந்தேன்

உன் அருகினிலே நடந்தேன்

உன் ஆற்றல்தனை வியந்தேன் 

உன் அரவணைப்பில் வளர்ந்தேன்

நீ சுவை குன்றாத தேன்

உன்னால் தானே தலைநிமிர்ந்தேனே

தாயே தமிழே உன்னை மறவேனே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


கட்டிக் கரும்பே நீ

கதிர் தரும் ஒளியே நீ

கன்னித் தமிழே நீ

கணினித் தமிழே நீ தானே 

சங்கத் தமிழே நீ

தங்கத் தமிழே நீ

நீதி நூலாய் நிமிர்ந்தாய் நீ

நெற்றிக் கண்களைத் திறந்தாய் நீ

பக்தித் தமிழாய் நீ

பாகுபாடு களைந்தாய் நீ


காப்பியப் பொருள்கள் தந்தாய் நீ

கவிச் சுவை இன்பம் தந்தாய் நீ

தனித்தனிப் பாடல்கள் தந்தாய் நீ 

தனித்தன்மை கொண்டு வளர்ந்தாய் நீ


புதுப்புது யாப்பு தந்தாய் நீ

புதுப்புது இலக்கியங்கள் தந்தாய் நீ

புதுப்பொலிவே நீ புத்துணர்வே நீ

கடலைத் தாண்டி வானம் தீண்டி வளர்ந்தாய் நீயே 


உலகினில் மூத்த முத்தமிழே

உலகம் முழுவதும் உன் ஆட்சியே

உள்ளம் மகிழும் அமுதக் காட்சியே

உயிரில் கலந்த அருள்மிகு மாட்சியே 


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் பெருமை கண்டு வியக்கிறேன்

உன் அருமை கண்டு மயங்குகிறேன்

உன் ஆற்றல் கண்டு பிரமிக்கிறேன்

உன் காலடியில் என்னைச் சமர்ப்பிக்கிறேன்


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே

சுயபரிசோதனை

இதுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சுயபரிசோதனை மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லா நற்பண்புகளும் ஒழுக்கமும் பகுத்தறிவும் சமத்துவ சகோதரத்துவ சிந்தனைகளும் இவற்றிலிருந்தே பிறக்கின்றன.

காலம்

நல்ல படிப்பினையைத் (அனுபவத்தை)

தந்த இறந்த காலம் 

உண்மையில் இறந்த காலமல்ல... 

அதுவும் நம் எதிர்காலமே...

அரசியல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள் 

அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...

உண்மையில், 

அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...

அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...

அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...

ஆகையால்,

அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...

சமூக விலங்காகிய மனிதன் 

எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...

இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...

அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...

அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...

அறிவுடைய மனிதர்கள் குறைவு...

அவர்களின் வாக்குகள் குறைவு...

அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...

ஆக,

அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...

மிஸ்டர் பொதுஜனத்திற்கு 

யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு

யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...

நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...

ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...


அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம். 

வெறுப்பு

நெருப்பு விளக்கிலோ அடுப்பிலோ இருந்தால்தான் நல்லது. 

மற்ற இடங்களில் இருந்தால் அழிவு நிச்சயம். 

ஆனால் வெறுப்பு எங்கிருந்தாலும் அழிவு தான்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

வெள்ளி விழா அழைப்பிதழ்

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி 
சுந்தரராஜபுரம் 

2000-2001இல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டாடும்

வெள்ளி விழா அழைப்பிதழ் 

நாள்: .04.2026 நேரம்:காலை 9.00 மணி

இடம்: பள்ளிக் கலையரங்கம், சுந்தரராஜபுரம் 

வரவேற்புரை: திருமதி. முனைவர் K.ஆனந்த கனக ஜோதி, உதவிப் பேராசிரியர், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் 

தலைமை :

திரு. S. வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., தலைமை ஆசிரியர், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் 

சிறப்பு விருந்தினர்கள் 

1) திருமதி. வயலட் அவர்கள், தலைமை ஆசிரியர் , அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி, வலசை.

2) திருமதி. கலைச்செல்வி அவர்கள்,சமூக அறிவியல் ஆசிரியை (ஓய்வு)

3) திரு.முருகானந்தம் அவர்கள், விடுதிக் காப்பாளர், சுந்தரராஜபுரம்.

4) திருமதி.               அவர்கள், தலைமை ஆசிரியர் அரசு ஆதிந தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்.

சிறப்புரை & ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசும் மாணவர்கள் 

முன்னாள் மாணவர்கள் 

1.திரு.பெ.இலட்சுமணன்  

கணபதி எம்பிராய்டிங் உரிமையாளர்

2.திரு.து.இராஜேந்திர பிரசாத் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர்

3.திரு.மு.திலகராஜன் 

மத்திய தொழிலக பாதுகாப்பு படை

4.திரு.கணேஷ் குமார் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர் 

5.திரு.மா.மாடசாமி 

மகா பிராய்லர்ஸ் உரிமையாளர் 

நன்றியுரை:

திரு.தி.முத்துராஜ் Trains Manager, 

திருநெல்வேலி 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் 

திரு. வீ.மகேந்திரன் தமிழாசிரியர் 

GHSS சங்கரலிங்கபுரம்


தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவண் 

முன்னாள் மாணவர்கள் 

வரவேற்புரை வழங்குபவர் திரு மாரிமுத்து

எங்கள் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்குபவர் திரு. மாரிமுத்து அவர்கள்...


"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா 

நூறு தடவை சொன்ன மாதிரி" 

என்ற ரஜினி ஸ்டைலோடு 

என்றும் பசுமை மாறாமல் 

எங்கள் நினைவில் நிற்பவரே!

அடிப்படைக் கணக்கை 

அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!

ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில் 

போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!

குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் 

வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!

எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !

ஈடு இணை இல்லையே உமக்கு !

காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல 

வள்ளல் கர்ணனின் கொடை போல 

தவமின்றி கிடைத்த வரமே 

எமது சூப்பர் ஸ்டார் 

கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதி காப்பாளர் அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை 

வருக வருக என வரவேற்பதில் 

உள்ளம் மகிழ்கிறோம்.

வரவேற்புரை வழங்குபவர் திருமதி இராஜேஸ்வரி

சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. கலைச்செல்வி அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி அவர்கள்


ஆனைமுகனின் தீவிர பக்தை இவர்!

முகத்தில் புன்னகை நிறைந்த மழலை இவர் !!

மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக 

முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!

முழுமையான அன்பைக் காட்டி,

எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!


கடலில் விளைந்த முத்து போல 

வயலில் விளைந்த நெல்மணி போல

மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!

எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக

வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய 

பெருமைக்கு உரியவர்

எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!

சமூக அறிவியல் ஆசிரியை 

திருமதி. கலைச்செல்வி அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!


வரவேற்புரை வழங்குபவர் திருமதி மு.கடல்கனி

தமிழ் ஆசிரியை திருமதி வயலட் அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி. மு.கடல்கனி அவர்கள்

மணியை ஈன்றதால் மாமலையும்

முத்தை ஈன்றதால் பெருங்கடலும்

அகிலை ஈன்றதால் அடர்வனமும்

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்

பெருமை அடைவது போல

உம்மைத் தமிழ் அன்னையாகப்

பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!


அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ

அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ

தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!

புரியாத இலக்கணத்தை புரிய வைத்த 

இலக்கண வித்தகரே!!!

தமிழ்ப் பாலூட்டி வளர்த்த 

எம் அன்னையே!!!

அர்ச்சுனனின் வில்லைப் போலவும்

கர்ணனின் கவசம் போலவும்

கம்பனின் கவிநயம் போலவும்

வள்ளுவனின் வாக்கு போலவும்

எமக்கு அருள் வாய்த்த தாயே!!!

எம் உயிரே

எம் நினைவே

எம் சுகந்தமே

எம்மை வாழ்வித்த தங்கமே


திருமதி. வயலட் வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பேருவகை கொள்கிறோம்!!!

வெள்ளி விழா நிகழ்ச்சி நேர அட்டவணை

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி சுந்தரராஜபுரம் 

2000-2001-ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகளும் கல்வியமுது ஊட்டிய ஆசிரியர்களும் சந்திக்கும் வெள்ளிவிழா 

இடம்:அரசு(ஆ.தி.ந)மேல்நிலைப்பள்ளி,சுந்தரராஜபுரம்                          நாள்: -05-2026

நேரம்: காலை 9.00-4.00 மணி

நிகழ்ச்சி நிரல் 

  1. முன்னாள் மாணவர்கள் வருகை-நேரம்: காலை 9 மணி
  2. ஆசிரியர்களை வரவேற்றல்-நேரம் :காலை 9.30 மணி
  3. குத்துவிளக்கு ஏற்றுதல் -நேரம்:காலை 9.40 மணி
  4. தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுதல்- நேரம்:காலை 9.50 மணி
  5. வரவேற்புரை -காலை 9.55 முதல் - 10.20 வரை( சிறப்பு விருந்தினர்கள் 5 பேருக்கு தலா 5 நிமிடங்கள் வீதம் 25 நிமிடங்கள்)
  6. ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தல் நேரம்: காலை 10.20 முதல் 10.25 வரை
  7. தலைமை உரை: தலைமை ஆசிரியர் -நேரம்: காலை 10.25 மணி முதல் 10.35 வரை
  8. ஆசிரியர்களுடன் வகுப்பு வாரியாக ஒளிப்படம் எடுத்தல் நேரம்: காலை 10.35 முதல் 10.45 வரை
  9. தேநீர் இடைவேளை நேரம்:காலை 10.45மணி முதல்-11.00மணி வரை
  10. சிறப்புரை நேரம்: காலை 11.00மணி முதல் 11.50 மணி வரை(முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவலைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துதல்)  (5 மாணவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் மொத்தம் 50 மணித்துளிகள்)
  11. ஆசிரியர்கள் ஏற்புரை-பிற்பகல் 11.50 மணி முதல்.- 12.10மணி வரை (திருமதி. வயலட், திருமதி. கலைச்செல்வி, திரு. முருகானந்தம் அவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் 30 நிமிடங்கள்)
  12. நினைவுப்பரிசு வழங்குதல் (தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்) நேரம்:நண்பகல் 12.10 முதல்.-12.30 வரை
  13. மதிய உணவு விருந்து- நேரம்: நண்பகல் 12.30 மணி முதல்.- 2.15 மணி வரை 
  14. மாணவர்கள் கலந்துரையாடல் நேரம்: 02.15 பி.ப.- 03.15 பி.ப.
  15. தேநீர் இடைவேளை நேரம்: பிற்பகல் 03.15 முதல்-3.25 வரை
  16. மாணவர்கள் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்தல் நேரம்: பிற்பகல் 03.25 முதல் 04.00 வரை. 2000-2001 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்!. 

சனி, 7 பிப்ரவரி, 2026

மேன்மக்கள்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

மாந்தர் இயல்பு

எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 

துஞ்சுவதே மாந்தர் இயல்பு

வாழ்க்கை

இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்! 


வைததனை இன்சொலாக் கொள்வானும் 

நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் 

ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் 

இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்


கைப்பு - கசப்பு

கட்டி-இனிப்பு