சனி, 7 பிப்ரவரி, 2026

உறுதி

இனிய காலை வணக்கம் 

மழை பொய்த்த காலத்தில் 

நெற்பயிர் தன்னை

வரகாக மாற்றிக் கொள்ளாது.

மழை மிகுந்த காலத்தில்

வரகு தன்னை

நெற்பயிராக மாற்றிக் கொள்ளாது.

அதுபோல, 

கேடு வந்து உற்ற போதும் 

சான்றோர் தீயோர் ஆகார்.

வாழ்வு வந்து உற்ற போதும் 

தீயோர் சான்றோர் ஆகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக