SILVER jubilee Alumini meeting Invitation
புதன், 29 ஏப்ரல், 2026
திங்கள், 13 ஏப்ரல், 2026
நினைவலைகள்
சின்னச் சின்னப் பூக்கள் போல
சிறகடிக்கும் சிட்டுக்கள் போல
வண்ண வண்ண வானவில் போல
வானில் தவழும் மேகங்கள் போல
எண்ண எண்ண நினைவுகள் எல்லாம்
உள்ளூற ஊருதே
உண்மையான அன்பினில் நெஞ்சம் உருகுதே கரையுதே
அழுது கொண்டே பள்ளிக்கு வந்தோம்
முதல் முதலாய் அன்னையைப் பிரிந்தோம்
யாரோ எவரோ அறியாமல் விழித்தோம்
அன்புக்காக ஏங்கிக் தவித்தோம்
இலக்கணமின்றி உரையாடல் நிகழ
கலக்கம் வந்து நம்மை அலைக்க
ஒருவரை ஒருவர் நண்பராய் ஏற்றோம்
மணக்கும் மஞ்சப்பையே நமது
ஸ்கூல் பேக்காய் ஆனது.
உள்ளே ஒரே ஒரு அட்டை சிலேடு.
அப்பா வாங்கி கொடுத்த
சில மாதங்களிலே
சுற்றி இருந்த பிளாஸ்டிக் கழன்றது.
ஸ்கூல்ல தந்த கல்லு சிலேட்டை
உடையாமல் வச்சுக்கப் பார்த்தோம்.
அதையும் மீறி சக்கைக் கட்டை
உடைஞ்சி போனதுதான் மிச்சம்.
சிலேட்டுக் குச்சியைக் கடனாய்க் கேட்டோம்
சின்னச் சின்னதாய் உடைத்துத் தின்போம்
சாக்பீஸ் தூளே திருநீரு ஆனது
கத்தாளைப் பழமே லிப் ஸ்டிக் ஆனது
பேப்பர் சுருளே பந்தாய் ஆனது
மக்காளச் சோளக் கட்டையும்
சிலேடும்
பேட்டும் பந்தும் ஆயின.
கண்ணாடிப் பாட்டிலே
தண்ணீர்ப் பாட்டில் ஆனது.
குலை குலையா முந்திரிக் காய்,
குளம் கரை,
ஓடிப் பிடிச்சு,
திருடன் போலிஸ்,
படமா எழுத்தா,
கல்லா மண்ணா,
கொட்டான் கொண்டான்,
துவால் கம்பு,
கொட்டை போடுதல்,
நாடு வாங்கி,
கண்டுபிடிச்சு,
கண்ணாமுச்சி,
புள்ளி வச்சு விளையாடுறது,
மடை கட்டி விளையாடுறது,
கோலிக்குண்டு,
பம்பரம் இதெல்லாம் விளையாடினோம்.
ஒன்றாம் வகுப்பு லட்சுமி டீச்சரு...
கம்பால அடிச்சு மண்டை வீங்குனது
இன்னும் ஞாபகம் இருக்கு...
ரெண்டாம் வகுப்பு கணேசன் வாத்தியாரு
ஓட்டை போடுற வாத்தியாரு
காதுலயே நகத்தால ஓட்டை போடுவாரு...
மூன்றாம் வகுப்பு இராமையா சாரு
சட்டை காலரை எப்பவும் தூக்கி விடுவாரு...
நாலாம் வகுப்பு கணபதி டீச்சரு...
ரெம்ப ஸட்ரிக்ட்டு...
நல்லா நடத்துவாங்க...
ஆனால் எனக்கு புரியாது...
அடி நல்லா பிண்ணி எடுப்பாங்க...
அதுபோக மூனு டீச்சரும்
மத்தியானம் மீத கொளம்ப
கூப்பிட்டு தருவாங்க
அதுக்காகவே அவங்க சாப்புடுற
இடத்துக்கு பக்கத்துல சன்னல்
ஓரமா உக்காருவோம்.
பள்ளிக்கூடத்து குழம்புல
எப்போதும் புழு மிதக்கும்.
அத பாத்து வாந்தி எடுப்பேன்
கனவெல்லாம் புழுவா மிதக்கும்.
அஞ்சாம் வகுப்பு அழகேசன் சாரு
..
அன்பு நிறைய காட்டினாரு...
காலையில ஸ்டடி வைப்பாரு...
வாய்ப்பாடு தினமும் சொல்ல வைப்பாரு...
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டாரு
சொல்லித் தந்தாரு...
ஆறாம் வகுப்பு தமிழ்ச் செல்வி டீச்சரு...
ரெம்ப கண்டிப்பானவரு...
அழகான லோலாக்கு தொங்கும்
நல்லா பாடம் நடத்துவாங்க...
நல்லா அடிப்பாங்க...
எங்க அப்பா மொத முறையா
பள்ளிக்கூடம் வந்தாங்க
அப்போ நான் நல்லா பிடிக்கிறதா
டீச்சரு எங்க அப்பாகிட்ட சொன்னாங்க
நிஜமாவே அப்போதான் நான்
வாசிக்க கத்துக்கிட்டேன்.
சமூக அறிவியல் சண்முக ராஜேஸ்வரி டீச்சர் அமைதியானவங்க...ரெம்ப அன்பானவங்க...
எனக்கு ரெம்பப் பிடிக்கும்.
இப்ப வரைக்கும் என் மனசுல குடியிருக்காங்க...
ஆனால் அவங்க இப்ப
உயிரோட இல்லை...
எப்ப எந்த சந்தேகம் கேட்டாலும்
திரும்ப திரும்ப சொல்லித் தருவாங்க...
நான் திரும்ப திரும்ப கேட்பேன்...
கொஞ்சம்கூட அவங்க மறுத்த தில்லை...
ஏழாம் வகுப்பு கோவிந்தராசன் சாரு,
வீட்டுப்பாடம் நிறைய தருவாரு...
பாடம் நடத்தி, உடனே கேள்வி கேப்பாரு
வரிவரியா கேள்வி எடுத்து எழுதச் சொல்லுவாரு...
கேள்வி கேட்கும் ஞானம் அவரால தான் வளர்ந்தது.
பதில் தெரியாதவங்கள
பதில் சொல்றவங்க தலையில கொட்டணும்...
அதுக்காகவே நான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன்
இருக்குறதிலேயே நான் தான் சின்ன பையன். குட்டையா இருப்பேன்...
பதில் சொல்லி நல்லா கொட்டுவேன்.
சின்ராசு சாரு,
பேரக் கேட்டாலே ஸ்கூலே அதிரும்.
தமிழ் எடுத்தார்.
அக்கறை உள்ளவர்
அறிவுரை சொல்பவர்
முருகானந்தம் சாரு
அஞ்சாம் வகுப்பு கணக்கு எடுத்தவரு
ஏழாம் வகுப்புல அடி பிண்ணி எடுத்தாரு
அடி வாங்காம இருக்கணும்னு
எல்லாரும் நல்லா படிச்சாங்க
கம்பு ஒடிய ஒடிய அடிப்பாரு...
கூட்டல் கழித்தல் விதிகளை மனப்பாடம் செய்ய வைச்சாரு...
வகுத்தல் வர்க்கம் வர்க்க மூலம்
எல்லா கடின கணக்கையும் சூப்பரா சொல்லி தருவாரு
ஒரே கணக்க பல மெத்தேடுல
சொல்லித் தந்தாரு..
சார்ட் கட் கண்டிப்பாக இருக்கும்
ஃபார்முலா மறந்தா அடி விழும்
மறதிக்கு மருந்து அடி, அடிதான் டானிக் என்பாரு.
சயின்ஸ் சார்
அவர் பேரு மறந்திடுச்சு...
நல்லா நடத்துவாரு...
ஆனா அக்கறை காட்ட மாட்டாரு
யாரு படிச்சா என்ன
படிக்கலன்னா என்ன என்று இருப்பாரு...
டீச்சரா இருந்தாலும் சாரா இருந்தாலும் பையங்கள மட்டும் தான் அடிப்பாங்க. கேள்ஸ அடிக்க மாட்டாங்க...
சத்திய நேசன் கெச்எம்...
தரமான கெச் எம்...
கெச்எம்மும் முருகானந்தம் சாரும் பள்ளிக்கூடத்தை பயங்கர ஸ்ட்ரிக்ட்டா வச்சிருந்தாங்க...
ஸ்டடி அமைதியாக நடக்கும். யாரும் லேட்டா வர முடியாது. மைக் ஸ்பீக்கர் வாங்கினாங்க.
தண்ணீர் தொட்டில முதல் முறையாக தண்ணீர் வர ஆரம்பிச்சது.
அதுக்கு முன்னாடி வரை
நான் தட்டை நாக்காலேயே கழுவுவேன்
இல்லைனா பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்குற தண்ணீர் பைப்ல வாய் வச்சி உறிஞ்சி தண்ணீர் வர வச்சு கழுவுவேன்.
தட்டை கழுவ தெரு தெருவா அலைஞ்சேன்
இந்த விஷயத்துல அந்த ஊர்க்காரங்க
ரெம்ப மோசம்...
தண்ணியே தர மாட்டாங்க...
தண்ணிக்காக ரெம்ப கஷ்டப்பட்டேன்...
கீழ கெடந்த குவாட்டர் பாட்டில
கழுவி தண்ணி கொண்டு போவேன்.
பல தடவ அது உடைஞ்சு போயிருச்சு...
இத இங்க நிறுத்துறேன்.
இங்கிலீஷ் டீச்சர் தேவி டீச்சர்...
கிராமர் சூப்பரா நடத்துவாங்க...
பொறுமையானவங்க...
ரெம்ப அன்பானவங்க...
அக்கறையானவங்க...
புரியாத இங்கிலீஷ் இவங்களாலதான்
புரிஞ்சது...
அறிவியலும் இவங்கதான் நடத்துவாங்க...
ரெம்ப நல்ல டீச்சர்...
எனக்கு ரெம்ப நேரம் உட்காந்திருந்து
திடீர்னு எழும்போது
சொளப்புன்னு விழுந்திடுவேன்...
எனக்கு சத்து குறைவுன்னு சொன்னார்...
நல்லா சாப்பிட சொன்னாங்க..
ஒருமுறை பச்சை பால குடிச்சிட்டு
ஸ்கூலுக்கு போயிட்டேன்...
வயித்தால போயி அரை மணி நேரம் லேட்டா வந்தேன்...
அத பத்தி கேட்டாங்க
நான் சொன்னேன்...
பச்சைப் பால் குடிக்க கூடாதுன்னு
சொன்னாங்க...
அப்போ லூயி பாஸ்டர் பத்தியும்
பாஸ்டுரைஷேசன் பத்தியும் சொல்லிக்
கொடுத்தாங்க...
வண்டில இருந்து வர்ற புகை மணத்துச்சுன்னா
அவுங்களுக்கு ரத்தம் கம்மியா இருக்கும் என்று சொன்னாங்க...
இப்படி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பாடம் நடத்துவாங்க...
ஒன்பதாம் வகுப்பு வைதேகி டீச்சர்...
நல்லா நடத்துவாங்க..
அன்பா இருப்பாங்க...
ஆனால் மனசுல பதியிற மாதிரி எதுவும் இல்லை...
ஒன்பதாம் வகுப்பு இங்கிலீஷ் டீச்சர் மங்கையர்க்கரசி...
ஓவர் சீனு...
லைப்ப என்ஜாய் பண்ணணும்பாங்க...
அக்கறை இல்லாதவங்க...
நல்லா நடத்தமாட்டங்க...
டெஸ்ட் சும்மா பாத்து பாத்து எழுதலாம்...
இங்கிலீஷ் கொஸ்டீன் ஆன்சர் ஒப்பிக்கனும்...
அரைகுறையா சொல்லலாம்...
யாரு முதல்ல ஒப்பிக்கிறாங்களோ
அவங்ககிட்ட மத்தவங்க ஒப்பிக்கணும்...
அவ்வளவுதான்...
அந்த வருசம் வேஸ்ட்...
கணக்கு எடுத்தவங்க யாருன்னு மறந்து போச்சு...
அந்த அளவுக்கு நல்லா நடத்தல...
சமூக அறிவியலும் அப்படித்தான்...
ஒன்பதாம் வகுப்பு வைதேகி டீச்சர தவிர எல்லோரும் வேஸ்ட்...
பத்தாம் வகுப்பு தமிழ் ஐயா...
முதல் மாதத் தேர்வு...
அக்கறை கொஞ்சமும் இல்லாதவர்
நல்லா நடத்த மாட்டார்...
இப்பவும் இருக்கிறார்...
பேச்சு போட்டிக்கோ கட்டுரை போட்டிக்கோ எப்போதும் தயார் செய்தது கிடையாது.
ஒரு கசப்பான அனுபவம் உண்டு..
எட்டாம் வகுப்பு படிக்கும் போது
முதல் முறையாக பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்...
முன்னுரை மட்டுமே சொல்லி முடித்து தடுமாறிய போது
தட்டிக் கொடுப்பதாக நினைத்து
வலிக்கும் அளவு முதுகில் அடித்து விட்டார்.
அன்று அவமானப்பட்ட நான்
அதன் பிறகு எப்போதும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதே இல்லை... இப்போது வரை...
இங்கிலீஷ் தேவி டீச்சர்...
பொற்காலம் மீண்டும் வந்தது..
அவர்கள் அறிவியலும் நடத்தினார்கள்...
கூடவே புதிதாக வயலட் டீச்சர் வந்தாங்க...
பொற்காலத்தின் உச்சம் அது...
நல்லா நடத்தினாங்க...
இலக்கணம் பிரிச்சு மேஞ்சாங்க...
ஈசியா புரிய வச்சாங்க...
சொல்லை பிரித்து பொருள் அறிவது
பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பு மொழித்திறன் எல்லாம் அத்துப்படி...
எக்ஸ்ட்ரா கிளாஸ் ஸ்டடி ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் வச்சாங்க...
ஞாயிற்றுக்கிழமை கூட லீவு கிடையாது.
ஆனால் கலர் டிரஸ் போட்டுக்கலாம்...
ஸ்டடில நானும் முத்துராசும் பாடம் நடத்துவோம்...
இப்ப வரைக்கும் அக்கறை கொண்டவங்க...
பத்தாம் வகுப்பு முடிச்சதும் என்னை இங்க படிக்காத... என்று சொல்லி அன்னப்பராஜா ஸ்கூல்ல சேத்துவிட்டாங்க...
ஆனால் நான் பயந்துட்டு இருபதுநாள்ல அந்த பள்ளிக்கூடத்த விட்டுட்டு கிருஷ்ணாபுரம் நாடார் ஸ்கூல்ல சேந்துட்டேன்.
பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு வெட்னரி காலேஜ் அப்ளிகேஷன் டீச்சர் ட்ரெயினிங் அப்ளிகேஷன் வாங்கி போட வச்சாங்க...
அவுங்களால தான் நான் டீச்சர் ட்ரெயினிங் படிச்சேன்...
பெரியம்மா பையன் தர்மலிங்கம் அண்ணன் என்னை கவுன்சிலிங் கூட்டிட்டு போயி வானரமுட்டி டயட் செலக்ட் பண்ணினாங்க...
டீச்சரா வேற ஸ்கூல் போயிட்டிங்க..
அதுக்கு அப்புறம் டீச்சர் கிட்ட தொடர்பு கட் ஆயிடுச்சு...
அவங்கள தேடி போகல...
என் அண்ணன் ஜெயச்சந்திரன் மேரேஜ்க்கு வந்தாங்க... அப்புறம் தான் தொடர்பு கிடைச்சது...
அப்போ அப்போ பேசுவாங்க...
என் மேரேஜ்ஜுக்கு வந்தாங்க...
என் பாப்பா பிறந்ததுக்கு கொஞ்சம் நாள் கழிச்சு வந்தாங்க...
இப்போ நாங்க முன்னாள் ஆசிரியர்களை வரவழைச்சு விழா நடத்தப் போறோம்.
கணக்கு சாரு... பேரு ஞாபகமில்லை...ஊசி மூக்கு வாத்தியாரு... கண்ணாடி போட்டுருப்பாரு...
நோட்ஸ் வச்சுத்தான் கணக்கு நடத்துவாரு...
கணக்கு நோட்ஸ் வாங்க சொன்னாரு...
அவரு நடத்துறது புரியாது...
அவருக்கு நடத்த தெரியாது...
சமூக அறிவியல் டீச்சர் கலைச்செல்வி டீச்சரு...
அன்பானவர்
அக்கறையானவர்...
படிக்கத் தெரியாத மாணவர்கள் தான் அவங்க டார்கெட்...
அவங்கள பக்கத்துல உட்கார வச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக் கொடுப்பாங்க...
ஆனை முகனே
ஆதி முதல் ஆனவனே
மோனைப் பொருளே
மூத்தவனே
கணேசா ஏன் என்று கேளுமையா
இந்த ஏழை முகம் பாருமையா என்று
விநாயகர் வாழ்த்து பாட வச்சவங்க...
தீவிர விநாயகர் பக்தை..
எக்ஸாம்க்கு முன்னாடி விநாயகர கும்பிட்டு வழி அனுப்பி வச்சாங்க...
கடின உழைப்பாளி...
ஆனால் மூட்டு வலியால அவதிப்பட்டாங்க...
தொடரும்...
ஓட்டு
நாயின் கண்களுக்கு
கோழிகள் எப்போதும்
எலும்பும் இறைச்சித்
துண்டுகளுமாகத் தான் தெரியும்
அரசியல் வாதியின் கண்களுக்கு
மக்கள் எப்போதும்
வெறும் ஓட்டுகளாகத் தான் தெரியும்
கோடையே
தகிக்கும் கோடையே - இந்தச்
சூட்டில் எரிந்து கருகும்
இந்த ஏழையின்
ஒடுங்கிய முகத்தைக்
காண மாட்டாயோ!!!
ஒட்டிய வயிறும்
சுருங்கிய தோலும் கண்டுமா
உன் மனம் இரங்கவில்லை...
கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வா...
நான் ...
அடுத்த கோடை வரை
ஆவியாகாமல்
இருக்க வேண்டுமல்லவா?
ஞாயிறு, 12 ஏப்ரல், 2026
வெள்ளி விழா தொகுப்பாளர் உரை
தொகுப்பாளர் உரை :
சரியாக நேரம் 09.30 மு.ப.-க்கு
சரியாக நேரம் 09.40 மு.ப.
குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு.
சரியாக நேரம் 09.50 மு.ப.
தமிழ்த்தாய் வாழ்த்து
சரியாக நேரம் 09.55 மு.ப.
சரியாக நேரம் 10.00 மு.ப.
வரவேற்புரை 1
வரவேற்புரை 2
சரியாக நேரம் 10.05 மு.ப
சரியாக நேரம் 10.10 மு.ப.
வரவேற்புரை 3
சரியாக நேரம் 10.15 மு.ப.
வரவேற்புரை 4
சரியாக நேரம் 10.20 மு.ப.
வரவேற்புரை 5
சரியாக நேரம் 10.25 மு.ப.
ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல்
ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
சரியாக நேரம் 10.30 மு.ப.
தலைமை ஆசிரியரின் தலைமை உரை
தலைமை உரை
சரியாக நேரம் 10.35 மு.ப.
ஒளிப்படம் எடுத்தல்
சரியாக நேரம் 10.50 மு.ப.
தேநீர் இடைவேளை
சரியாக நேரம் 11.00 மு.ப.
சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை
சிறப்புரை 1
சரியாக நேரம் 11.10மு.ப.
சிறப்புரை 2
சரியாக நேரம் 11.20
சிறப்புரை 3
சரியாக நேரம் 11.30 மு.ப.
சிறப்புரை 4
சரியாக நேரம் 11.40 மு.ப.
சிறப்புரை 5
சரியாக நேரம் 11.50 மு.ப.
ஏற்புரை வழங்குதல்
ஏற்புரை1
சரியாக நேரம் நண்பகல் 12.00 மணி
ஏற்புரை 2
சரியாக நேரம் 12.10 பி.ப.
ஏற்புரை 3
சரியாக நேரம் 12.20 பி.ப.
சரியாக நேரம் 12.25 பி.ப.
நன்றியுரை வழங்குதல்
நன்றியுரை
சரியாக நேரம் 12.35 பி.ப.
இது உணவு இடைவேளை நேரம்
சரியாக நேரம் 02.00 பி.ப.
கலந்துரையாடல் நிகழ்வு
சரியாக நேரம் 03.00 பி.ப.
தேநீர் இடைவேளை
சரியாக நேரம் 3.20 பி.ப.
தற்படம் மற்றும் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளுதல்
சரியாக நேரம் 04.00 பி.ப.
பிரியா விடை பெறுதல்
செவ்வாய், 17 பிப்ரவரி, 2026
பகுத்தறிவு
எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல எல்லை தாண்டி நீண்டிருக்கிறது தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சிகளும் பகுத்தறிவும். விளைவு, வெட்ட முடியாத அளவிற்கு சுயநலமும் இறுமாப்பும் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் கிளைகளாய்ப் பரவியிருக்கின்றன.
தலைவன்
யார் தலைவன் தெரியுமா?
அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தையும்
உரிமைகள் இல்லாதவர்களுக்கு உரிமைகளையும்
பெற்றுத் தருபவனே
உண்மையான தலைவன்.
சிங்கம் சிங்கம்தான்
எத்தனை காலம்
தந்திரம் செய்து
பிழைத்து வந்தாலும்
நரியால் ஒருநாளும்
சிங்கமாகிட முடியாது
வியாழன், 12 பிப்ரவரி, 2026
மனைவி
அன்பே அன்பே
அழகே ஒளியே
அமுதே நீயே
இன்ப ஊற்றே
இளந் தென்றல் காற்றே
இளமை விருந்தே
இசையின் உருவே
நான் வரமாய்ப் பெற்ற
வாழ்வே நீயே
உன்னை வருணிக்கவே
வார்த்தை இல்லையே
அன்பே அன்பே
அழகே நீயே
வெகுளிப் பெண்ணே
வெள்ளை மனமே
கொள்கை கொண்ட
குழந்தைத் தனமே
என்னை வாழ்விக்கவே
வந்த வாழ்க்கைத் துணையே
அன்பே அன்பே
அழகே ஒளியே
தங்க நிறமே
எந்தன் உயிரே
தாரமாய் வந்தாய்
தளிர்நடை பயின்றாய்
தாயாய் மலர்ந்தாய்
உன் தாய்மை அன்பில்
உருகிப் போனேன்
உனக்கே உனக்கே
என்றும் வாழ்வேன்
அன்பே அன்பே
அழகே அமுதே
வரமே நீயே
உன்னைப் பெறவே
என் புண்ணியம் என்னவோ
உன் பாசத்தாலே
நான் நெகிந்தே நெகிழ்ந்தே
உருகிப் போனேன்
உன் அக்கறை கண்டு
நான் அசந்து போனேன்
உன் அழகைக் கண்டு
நான் சொக்கிப் போனேன்
அன்பே அன்பே
அழகை ஒளியே
தங்கச் சிலையே
தாமரை இதழே
மல்லிகை மணம் நீ
தேனின் சுவை நீ
வானின் மழை நீ
மாலைத் தென்றல் நீ
திகட்டாத இன்பம் நீ
எந்தன் உயிரே நீ
எந்தன் உலகம் நீ
எந்தன் வாழ்வே நீ
எந்தன் வசந்தம் நீ
எந்தன் சுகமே நீ
எந்தன் சொர்க்கம் நீ
அன்பே அன்பே
அழகே ஒளியே
என்னை வாழ்விக்கவே
வந்தவள் நீயே
அன்பே அன்பே
அழகே ஒளியே
வெள்ளி விழா விழிப்புணர்வு பாடல்
நண்பனே நண்பியே
உன்னையே நம்பியே
நண்பனே நண்பியே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
நல்லது கெட்டது அறிந்தவன் நீ
நாலு விவரம் தெரிந்தவன் நீ
நாற்பது வயதைக் கடந்தவன் நீ
நாசூக்காக சொல்லுறேன் கேட்டுக்க நீ
நண்பனே நண்பியே
உன்னையே நம்பியே
நண்பனே நண்பியே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
அழகான குடும்பம் உனக்கிருக்கு
பழகிய சமூகத்தில் மதிப்பிருக்கு
நீ செய்வ தெல்லாம் உன் குடும்பம் பார்த்திருக்கு
வேண்டாத வம்பிருந்தால் நீ விலக்கு
நண்பனே நண்பியே
உன்னையே நம்பியே
நண்பனே நண்பியே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
பொறுப்புகள் கடமைகள் நிறைந்தவன் நீ
வெறுப்புகள் இருந்தால் விலக்கிடு நீ
தாழ்வான எண்ணத்தைத் தவிர்த்திடு நீ
பள்ளிக்காலக் காதலை நீ
அழகான கனவென்று கடந்து வா நீ
அழகான கனவென்று கடந்து வா நீ
தனிமரம் இல்லை நீ
தலைமுறை நீயே
உன் பொறுப்பை உணர்ந்து செயல்படு நீ
நண்பனே நண்பியே
உன்னையே நம்பியே
நண்பனே நண்பியே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
உணர்ச்சி நெருப்புக்கு உருவம் கொடாதே
கடந்த காதலைக் காயப்படுத்தாதே
அழகான வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே
அர்த்தமுள்ள வாழ்வைக் கெடுத்துவிடாதே
நல்லது சொல்லுறவன் உன் நண்பன்
நல்லபடி கேட்டுக்கிட்டா நீயே என் நண்பன்
நண்பனே நண்பியே
உன்னையே நம்பியே
நண்பனே நண்பியே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
இந்த வெள்ளிவிழா ஏற்பாடே
அதிரத்னா
அதி அதி அதி அதிரத்னா
ஒளி ஒளி ஒளி ஒளிரத்னா
ரத்தினம் நீ
மாணிக்கம் நீ
வைரம் நீ
உன் அங்கமெல்லாம் தங்கம்
நீ இருக்குமிடமெல்லாம் மகிழ்ச்சி தங்கும்
நீ வளர்ந்து வரும் சிங்கம்
உன் பெருமை விளங்கும் எங்கும்
நீ இமயம் தீண்டி உயர வேண்டும்
நீ வானம் தாண்டி பறக்க வேண்டும்
உனக்கே தனி உலகம் படைக்க வேண்டும்
தரணியை நீயே காக்க வேண்டும்
அதி அதி அதி அதிரத்தினம்
ஒளி ஒளி ஒளி ஒளிரத்தினம்
மனைவி
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே
உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே
உன் அன்பை காட்டி நீ
என்னைத் தின்றவளே
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உன் அக்கறை என்னையே
என்னவோ பண்ணுதே
என்னவோ பண்ணுதே
உயிரையே தின்னுதே
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ
என் உள்ளம் தடுமாறுதே
உன் அளவுக்கு என்னால்
உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே
குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்
உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்
உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன்
உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
உன்னைத் துணையாகப் பெறவே நான்
என்ன தவம் செய்தேனோ
உன் அன்பைப் பெறவே நான்
என்ன கொடுத்து வைத்தேனோ
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
வண்ணம் தீட்டாத ஓவியமே
இன்பம் கூட்டும் அமுதக் கலசமே
தேன்மழைச் சாரலே
பூமணத் தென்றலே
அழகொளிரும் அலங்காரத் தேரே
உன்னை துணையாகப் பெறவே
என்ன தவம் செய்தேனோ
ஆருயிர் மனைவியே
அன்பான துணைவியே
தமிழே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
உணர்ச்சித் தீப்பிழம்பே
ஊக்கம்தரும் நற்றமிழே
எழில்மிகுந்த இயற்றமிழே
ஏற்றமுள்ள நாடகமே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
உன் உதிரத்திலே உதித்தேன்
உன் மடியினிலே தவழ்ந்தேன்
உன் அருகினிலே நடந்தேன்
உன் ஆற்றல்தனை வியந்தேன்
உன் அரவணைப்பில் வளர்ந்தேன்
நீ சுவை குன்றாத தேன்
உன்னால் தானே தலைநிமிர்ந்தேனே
தாயே தமிழே உன்னை மறவேனே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
கட்டிக் கரும்பே நீ
கதிர் தரும் ஒளியே நீ
கன்னித் தமிழே நீ
கணினித் தமிழே நீ தானே
சங்கத் தமிழே நீ
தங்கத் தமிழே நீ
நீதி நூலாய் நிமிர்ந்தாய் நீ
நெற்றிக் கண்களைத் திறந்தாய் நீ
பக்தித் தமிழாய் நீ
பாகுபாடு களைந்தாய் நீ
காப்பியப் பொருள்கள் தந்தாய் நீ
கவிச் சுவை இன்பம் தந்தாய் நீ
தனித்தனிப் பாடல்கள் தந்தாய் நீ
தனித்தன்மை கொண்டு வளர்ந்தாய் நீ
புதுப்புது யாப்பு தந்தாய் நீ
புதுப்புது இலக்கியங்கள் தந்தாய் நீ
புதுப்பொலிவே நீ புத்துணர்வே நீ
கடலைத் தாண்டி வானம் தீண்டி வளர்ந்தாய் நீயே
உலகினில் மூத்த முத்தமிழே
உலகம் முழுவதும் உன் ஆட்சியே
உள்ளம் மகிழும் அமுதக் காட்சியே
உயிரில் கலந்த அருள்மிகு மாட்சியே
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
உன் பெருமை கண்டு வியக்கிறேன்
உன் அருமை கண்டு மயங்குகிறேன்
உன் ஆற்றல் கண்டு பிரமிக்கிறேன்
உன் காலடியில் என்னைச் சமர்ப்பிக்கிறேன்
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
இன்சுவைத் தீந்தமிழே
ஈடில்லா முத்தமிழே
சுயபரிசோதனை
இதுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சுயபரிசோதனை மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லா நற்பண்புகளும் ஒழுக்கமும் பகுத்தறிவும் சமத்துவ சகோதரத்துவ சிந்தனைகளும் இவற்றிலிருந்தே பிறக்கின்றன.
காலம்
நல்ல படிப்பினையைத் (அனுபவத்தை)
தந்த இறந்த காலம்
உண்மையில் இறந்த காலமல்ல...
அதுவும் நம் எதிர்காலமே...
அரசியல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள்
அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...
உண்மையில்,
அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...
அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...
அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...
ஆகையால்,
அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...
சமூக விலங்காகிய மனிதன்
எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...
இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...
அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...
அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...
அறிவுடைய மனிதர்கள் குறைவு...
அவர்களின் வாக்குகள் குறைவு...
அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...
ஆக,
அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...
மிஸ்டர் பொதுஜனத்திற்கு
யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு
யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...
நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...
ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...
அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம்.
வெறுப்பு
நெருப்பு விளக்கிலோ அடுப்பிலோ இருந்தால்தான் நல்லது.
மற்ற இடங்களில் இருந்தால் அழிவு நிச்சயம்.
ஆனால் வெறுப்பு எங்கிருந்தாலும் அழிவு தான்.
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
வெள்ளி விழா அழைப்பிதழ்
அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி
சுந்தரராஜபுரம்
2000-2001இல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டாடும்
வெள்ளி விழா அழைப்பிதழ்
நாள்: .04.2026 நேரம்:காலை 9.00 மணி
இடம்: பள்ளிக் கலையரங்கம், சுந்தரராஜபுரம்
வரவேற்புரை: திருமதி. முனைவர் K.ஆனந்த கனக ஜோதி, உதவிப் பேராசிரியர், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம்
தலைமை :
திரு. S. வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., தலைமை ஆசிரியர், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம்
சிறப்பு விருந்தினர்கள்
1) திருமதி. வயலட் அவர்கள், தலைமை ஆசிரியர் , அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி, வலசை.
2) திருமதி. கலைச்செல்வி அவர்கள்,சமூக அறிவியல் ஆசிரியை (ஓய்வு)
3) திரு.முருகானந்தம் அவர்கள், விடுதிக் காப்பாளர், சுந்தரராஜபுரம்.
4) திருமதி. அவர்கள், தலைமை ஆசிரியர் அரசு ஆதிந தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்.
சிறப்புரை & ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசும் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்
1.திரு.பெ.இலட்சுமணன்
கணபதி எம்பிராய்டிங் உரிமையாளர்
2.திரு.து.இராஜேந்திர பிரசாத் B.E.(Civil Engineer)
கட்டடப் பொறியாளர்
3.திரு.மு.திலகராஜன்
மத்திய தொழிலக பாதுகாப்பு படை
4.திரு.கணேஷ் குமார் B.E.(Civil Engineer)
கட்டடப் பொறியாளர்
5.திரு.மா.மாடசாமி
மகா பிராய்லர்ஸ் உரிமையாளர்
நன்றியுரை:
திரு.தி.முத்துராஜ் Trains Manager,
திருநெல்வேலி
நிகழ்ச்சித் தொகுப்பாளர்
திரு. வீ.மகேந்திரன் தமிழாசிரியர்
GHSS சங்கரலிங்கபுரம்
தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவண்
முன்னாள் மாணவர்கள்
வரவேற்புரை வழங்குபவர் திரு மாரிமுத்து
எங்கள் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்குபவர் திரு. மாரிமுத்து அவர்கள்...
"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி"
என்ற ரஜினி ஸ்டைலோடு
என்றும் பசுமை மாறாமல்
எங்கள் நினைவில் நிற்பவரே!
அடிப்படைக் கணக்கை
அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!
ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில்
போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!
குட்டையை குழப்பி மீன் பிடிக்கும்
வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!
எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !
ஈடு இணை இல்லையே உமக்கு !
காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல
வள்ளல் கர்ணனின் கொடை போல
தவமின்றி கிடைத்த வரமே
எமது சூப்பர் ஸ்டார்
கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதி காப்பாளர் அவர்களே
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை
வருக வருக என வரவேற்பதில்
உள்ளம் மகிழ்கிறோம்.
வரவேற்புரை வழங்குபவர் திருமதி இராஜேஸ்வரி
சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி DMLT., PCP., அவர்கள்
வெள்ளை உள்ளம் கொண்ட
அன்புத்தாய் இவர்!!
நேசமும் நெருக்கமும் காட்டுவதில்
அன்னை தெரேசாவுக்கு நிகர் இவர்!!
முகத்தில் புன்னகை தவழும் மழலை இவர் !!
மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக
முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!
முழுமையான அன்பைக் காட்டி,
எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!
கடலில் விளைந்த முத்து போல
வயலில் விளைந்த நெல்மணி போல
மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!
எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக
வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய
பெருமைக்கு உரியவர் நீங்கள்!!!
எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!
சமூக அறிவியல் ஆசிரியை
திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களே
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உம்மை வருக வருக என வரவேற்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!
வரவேற்புரை வழங்குபவர் திருமதி மு.கடல்கனி
தமிழ் ஆசிரியை திருமதி வயலட் அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி. மு.கடல்கனி அவர்கள்
மணியை ஈன்றதால் மாமலையும்
முத்தை ஈன்றதால் பெருங்கடலும்
அகிலை ஈன்றதால் அடர்வனமும்
வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்
பெருமை அடைவது போல
உம்மைத் தமிழ் அன்னையாகப்
பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!
அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ
அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ
தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!
புரியாத இலக்கணத்தை புரிய வைத்த
இலக்கண வித்தகரே!!!
தமிழ்ப் பாலூட்டி வளர்த்த
எம் அன்னையே!!!
அர்ச்சுனனின் வில்லைப் போலவும்
கர்ணனின் கவசம் போலவும்
கம்பனின் கவிநயம் போலவும்
வள்ளுவனின் வாக்கு போலவும்
எமக்கு அருள் வாய்த்த தாயே!!!
எம் உயிரே
எம் நினைவே
எம் சுகந்தமே
எம்மை வாழ்வித்த தங்கமே
திருமதி. வயலட் வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உம்மை வருக வருக என வரவேற்பதில்
பேருவகை கொள்கிறோம்!!!
வெள்ளி விழா நிகழ்ச்சி நேர அட்டவணை
அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி சுந்தரராஜபுரம்
2000-2001-ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகளும் கல்வியமுது ஊட்டிய ஆசிரியர்களும் சந்திக்கும் வெள்ளிவிழா
இடம்:அரசு(ஆ.தி.ந)மேல்நிலைப்பள்ளி,சுந்தரராஜபுரம் நாள்: -05-2026
நேரம்: காலை 9.00-4.00 மணி
நிகழ்ச்சி நிரல்
- முன்னாள் மாணவர்கள் வருகை-நேரம்: காலை 9 மணி
- ஆசிரியர்களை வரவேற்றல்-நேரம் :காலை 9.30 மணி
- குத்துவிளக்கு ஏற்றுதல் -நேரம்:காலை 9.40 மணி
- தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுதல்- நேரம்:காலை 9.50 மணி
- வரவேற்புரை -காலை 9.55 முதல் - 10.20 வரை( சிறப்பு விருந்தினர்கள் 5 பேருக்கு தலா 5 நிமிடங்கள் வீதம் 25 நிமிடங்கள்)
- ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தல் நேரம்: காலை 10.20 முதல் 10.25 வரை
- தலைமை உரை: தலைமை ஆசிரியர் -நேரம்: காலை 10.25 மணி முதல் 10.35 வரை
- ஆசிரியர்களுடன் வகுப்பு வாரியாக ஒளிப்படம் எடுத்தல் நேரம்: காலை 10.35 முதல் 10.45 வரை
- தேநீர் இடைவேளை நேரம்:காலை 10.45மணி முதல்-11.00மணி வரை
- சிறப்புரை நேரம்: காலை 11.00மணி முதல் 11.50 மணி வரை(முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவலைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துதல்) (5 மாணவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் மொத்தம் 50 மணித்துளிகள்)
- ஆசிரியர்கள் ஏற்புரை-பிற்பகல் 11.50 மணி முதல்.- 12.10மணி வரை (திருமதி. வயலட், திருமதி. கலைச்செல்வி, திரு. முருகானந்தம் அவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் 30 நிமிடங்கள்)
- நினைவுப்பரிசு வழங்குதல் (தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்) நேரம்:நண்பகல் 12.10 முதல்.-12.30 வரை
- மதிய உணவு விருந்து- நேரம்: நண்பகல் 12.30 மணி முதல்.- 2.15 மணி வரை
- மாணவர்கள் கலந்துரையாடல் நேரம்: 02.15 பி.ப.- 03.15 பி.ப.
- தேநீர் இடைவேளை நேரம்: பிற்பகல் 03.15 முதல்-3.25 வரை
- மாணவர்கள் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்தல் நேரம்: பிற்பகல் 03.25 முதல் 04.00 வரை. 2000-2001 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்!.
சனி, 7 பிப்ரவரி, 2026
மேன்மக்கள்
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

மாந்தர் இயல்பு
எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் இயல்பு
வாழ்க்கை
இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்!
வைததனை இன்சொலாக் கொள்வானும்
நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும்
ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும்
இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்
கைப்பு - கசப்பு
கட்டி-இனிப்பு
வாழ்க்கை
வைரக்கல் போன்ற வாழ்க்கை இது. பார்வையிழந்தவன் "கருங்கல்" என்று எண்ணித் தூக்கி எறிவது போல் எறிந்துவிடலாகாது.
நான் பெற்ற இன்பம்
இறையின்பம் வேண்ட
வேண்ட கிட்டும்!!!
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
நான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
-திருமந்திரம்
துன்பமே இன்பம்
இனிய காலை வணக்கம்
அஞ்சத் தகுந்த கடலே
அதிசயங்கள் நிறைந்தது!
ஆர்ப்பரிக்கும் அருவியே
அழகு நிறைந்தது!!
கடப்பதற்கரிய நெடுங்காடே
பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!
ஏறுதற்கரிய பெருமலையே
எழிற்காட்சி தருவது!!!
எனில்,
துன்பத்தைக் கடந்த பின்னே
இன்பமே வந்தெய்தாதோ?
உழவு
இனிய காலை வணக்கம்
அகல உழுவதை விட
ஆழ உழுவது நன்று
நிலத்திற்குப் பொருந்தும்
பொன் மொழி
மனத்திற்கும் பொருந்தும்.