வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

சிறப்புரை பெ.இலட்சுமணன்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை வழங்க வருமாறு திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 

அன்ன சாத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணிய புலவன் பாரதியின் 

எண்ணப்படி ஆசிரியர் பணியை 

அர்ப்பணிப்போடு ஆற்றிய 

என் மனம் கவர்ந்த 

ஆசிரியர் பெருமக்களை வணங்கி 

என் சிறப்புரையைத் தொடங்குகிறேன்...


எம் தமிழ் அம்மா... 

அம்மம்மா...

சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைன்னு 

பாக்க மாட்டாங்க...

அடிச்சு புடிச்சு லீவு நாள்ல 

ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க....

அப்போ கலர் டிரஸ் போட்டுக்கலாம்...

ஒரே கலர் கலரா இருக்கும்!!!

அக்கறையோடு நடத்துவாங்க...

திரும்பத் திரும்ப மொழிப்பயிற்சி தான்...

கை வலிக்க வலிக்க கரும்பலகை முழுக்க 

இலக்கணப் பயிற்சிதான்...!

அப்போ தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பர், 

செகண்ட் பேப்பர்ன்னு 

ரெண்டு பேப்பர் உண்டு...

கடின உழைப்பாளி..!

அதனால நாங்க நல்லா படிக்கணும்னு ஆசைப்படுவாங்க...

எழுத்துப்பிழை இருக்கான்னு 

-வரி வரியா பார்ப்பாங்க...

பேப்பர் ஃபுல்லா சிவப்புமை கோடு தான் இருக்கும்...

எழுத்து மணி மணியா எழுதணும்பாங்க...

நாங்களும் குண்டு குண்டா எழுதுவோம்...

இவர்கிட்ட படிச்சவன் 

மெல்ல படிக்கிறவனா இருந்தாலும்.

70 மார்க் எடுத்திருவான்...

டீச்சிங்கும் கோச்சிங்கும் அப்படி இருக்கும்...


எங்க வாய் சும்மா கிடக்காது...

அரட்டை அடிச்சுகிட்டே இருப்போம்.

அந்த நேரம் எங்க மேல உள்ள அக்கறையினால

உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க...

சில நேரம் அழுதுருக்காங்க...

அதெல்லாம் அப்ப புரியல...

இப்பதான் அவரோட அருமை புரியுது...

இவருகிட்ட தமிழ் படிச்சதனாலேயே 

நிறைய பேரு

டிஎன்பிஎஸ்சி பாஸ் பண்ணி வேலைக்கு போயிருக்காங்க...


அடிக்கடி வெட்டிப்பேச்சு பேசுறதுனால 

நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தான் கூத்தாடும் 

என்ற பழமொழியைச் சொல்லுவாங்க...

எப்பொழுதும் எங்கள் மனசுல நிற்பவர் நீங்கள்....

நன்றி மா ... தமிழம்மா...!!!


அப்புறம் சமூக அறிவியல் டீச்சர்...

எப்பவும் சிரிச்ச முகம்...

அன்பாலேதான் திருத்தணும்றது 

இவரோட பாலிசி....

எப்பவுமே படிக்காமல் திரியுற 

10, 20 பிள்ளைகளை தத்தெடுத்துப்பாங்க...

அதாவது எப்பவுமே பக்கத்துலயே 

உட்கார வைத்துக்கொள்வார்கள்...

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வைப்பாங்க...

கிளிப்பிள்ளை மாதிரி...

நல்லா படிக்கிற மாணவர்களை 

பெருசா கண்டுக்க மாட்டாங்க...

அவங்களுக்கு ஏதாவது படிக்க கொடுத்திடுவாங்க...


அதிக ரசிகர் படை இவருக்கு தான்...

நாங்க சாப்பிடறது எதுவா இருந்தாலும் வாங்கிக்குவாங்க...

அது சுத்தம் இல்லன்னு தெரியும்...

இருந்தாலும்...

குகனோட தேனையும் மீனையும் ராமன் வாங்கின மாதிரி...

பாசத்துல கொடுக்கிறத வாங்கிக்குவாங்க...


எங்க டீச்சருக்கு விநாயகர்தான் பிடித்த கடவுள்...

பப்ளிக் எக்ஸாம் வரைக்குமே 

எங்க டீச்சரு...

ஆனைமுகனே 

ஆதி முதல் ஆனவனே

மோனைப் பொருளே 

மூத்தவனே

கணேசா ஏன் என்று கேளுமையா 

இந்த ஏழை முகம் பாருமையா 

அப்படிங்கற விநாயகர் வணக்கத்தை 

எல்லாரையும் சொல்ல வச்சு 

பாஸ் பண்ண வச்சவங்க...


ஒரு இடத்தில் உட்காராம 

அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு 

திரியுற பசங்கள செல்லமா அடிப்பாங்க...

யாருக்குமே வலிக்காது...

வாய் பேசி அடி வாங்குற பசங்கள பாத்து...

நுணலும் தன் வாயால் கெடும் 

அப்படின்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவாங்க...

எப்பவுமே... பெத்த தாய் மாதிரி தான்...

நலம் விசாரிப்பாங்க...

எல்லாம் அந்தக் கடவுள் கொடுத்த வரம்...


அப்புறம்...

எங்க பாட்ஷா வாத்தியார்...

முருகானந்தம் சாரு..

ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுத்தவர்...

கூட்டல் விதி, கழித்தல் விதியை 

தினமும் மனப்பாடம் செய்ய வைப்பார்...

அருமையா நடத்துவார்...

முதல்ல ...

ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துவாரு...

அப்புறம் ...

ஷார்ட் கட் சொல்லி நடத்துவாரு...

அப்புறம் ...

ஒரு குழப்பு குழப்பி விட்டு

எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி 

நடத்துவாரு...


ஒரே கணக்க குறைஞ்சது 

மூணு மெத்தட்ல நடத்துவாரு...

இதனால எங்களோட டவுட் எல்லாம் கிளியர் ஆயிடும்...

கணக்குக்கு சரியான பேஸ்மண்ட் அமைச்சு தந்ததே இவர்தான்...

ஏதாவது மறந்து போச்சுன்னா...

அடி விழும்...

நிறைய கம்பு ஒடியும்...

வேற கம்பு கொண்டுவர சொல்லி...

அடிப்பார்....

நோய்க்கு மருந்து டானிக்...

மறதிக்கு மருந்து ...அடிதான்ம்பாரு...

நாங்க நிறைய டானிக் வாங்கி இருக்கிறோம்...

அந்த டானிக்கு தான் ...

அந்த அக்கறை தான்...

எங்களுக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை...

எப்பவும் நீங்க எங்க மனசுல தான் இருப்பீங்க...

தேங்க்யூ சார்....

சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் 

நன்றி ...!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக