சனி, 7 பிப்ரவரி, 2026

திணிப்பு

ஒருவன் தன்னுடைய 

விருப்பு வெறுப்புகளை 

தன்னை நம்பி உள்ள 

தன் குடும்ப உறுப்பினர்களிடம் 

திணிப்பதும் 

ஒருவகையான வன்முறையே!!! 

தன்னைச் சுற்றி உள்ள 

நபர்களைவிட 

தன்னைத் தானே 

பலம்வாய்ந்த மனிதன் 

என்று எண்ணும்போது 

தன்னுடைய ஈகோவோடு 

தன்னுடைய அசுர குணங்களும் 

இயல்பாகவே வளர்கின்றன. 

தன்னைப் போலவே 

பிறரையும் நேசிப்போம். 

ஒவ்வொருவருக்கும் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் 

இருக்கும் என்பதை உணர்ந்து 

அவற்றில் நம் விருப்பு -

வெறுப்புகளைத் திணிக்காமல் 

இருப்பதே இறைக்குணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக