அறிவுக்குப் புலப்படாத
அம்சங்களை,
அந்தணர் திணித்த வழிமுறைகளை,
அப்படியே நம்பித் தொலைக்காதே-மனமே!
உய்த்துணர மெய் உண்டு.
உணர்வாலே, உள்ளுணர்வாலே,
உளப்பகுப்பாலே உய்த்துணரத் தலைப்படுவாய்!!
மூடநம்பிக்கை உன்னை முடமாக்கும்!
முடவனே நீ ஆனாலும் ,
நல்லதை மட்டுமே நீ எண்ணினால்,
உன் முடமும் உனக்குத் துணையாகும்!!
கடந்த கால கவலைகளைத்
தூக்கித் திரியாதே?
நீ கோவேறு கழுதையில்லை...
வெற்றித் தடம் பதிக்கும் குதிரை,
வீரனை மட்டுமே சுமக்கும்!!!
நல்லதை மட்டுமே நினைக்கும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக