திரு.மா.மாடசாமி அவர்களை சிறப்புரை மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேச வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மலையிலே பிறந்தாலும்
சந்தனம் ...
மலைக்கு என்ன செய்யும்?
கடலிலே பிறந்தாலும்
முத்து ...
கடலுக்கு என்ன செய்யும்?
வீணையிலே பிறந்தாலும்
இசை ...
வீணைக்கு என்ன செய்யும்?
நீங்கள் வரைந்த
வண்ண ஓவியம் நாங்கள் ...
நீங்கள் செதுக்கிய
அழகுச்சிலைகள் நாங்கள் ...
நிஜ உலகின் பிரம்மாக்கள் நீங்கள்...
உளியின் வலியைப்
பொறுத்துக் கொள்ளும் கற்களை...
நீங்கள்...
பல்துறை வித்தகராக மாற்றி விடுகிறீர்கள்...
உங்களிடம் பட்ட கடனை
எங்களால் எப்படித் திருப்பி தர முடியும்???
பாரபட்சம் பாராமல் பெய்யும் மழைத்துளி நீங்கள்..
வேறுபாடு பாராமல் குடிசையிலும் நுழையும் இளம் தென்றல் நீங்கள்...
பள்ளத்தை நோக்கியே பாயும் ஆற்று நீர் நீங்கள்...
ஏதுமில்லாத எங்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்டீர்கள்...!
பூவில் சுரந்த தேன் போல...
நாவில் தவழும் தமிழ் போல...
புள்ளிகள் நிறைந்த கலைமான் போல...
புன்னகை தவழும் மழலை போல...
உணவில் கரைந்த உப்பு போல...
கனவில் தோன்றும் தேவதை போல...
எங்கள் வாழ்க்கையைச்
சுவை மிக்கதாக மாற்றினீர்கள்...
ஆனாலும் இப்போது...
அதிக ஸ்ட்ரெஸ் ஃபுல்லான ஜெனரேஷன் நாம தான்...
நேற்றைய பழமைக்கும்
இன்றைய புதுமைக்கும்
இடையில பிறந்து வளர்ந்தவங்க நாங்க...
நல்லா யோசிச்சா...
நம்ம கிட்ட இருக்கிற நல்ல பண்புகளே
நமக்கு பிரச்சனையா அமைஞ்சிருது...
உண்மை, நேர்மை,
உழைப்பு, உறவுகளை மதிக்கிறது என்று
நாம கத்துக்கிட்ட எல்லா நல்ல விஷயங்களுக்கும்
இந்த சமூகத்தில் இப்ப மதிப்பு இல்ல...
அதனால, இந்த குணங்களை எல்லாம் வச்சிக்கிறதா
இல்ல விட்டுவிடலாமா அப்படின்ற குழப்பத்துல டென்ஷன் டென்ஷன்...
தீர்வு ஒன்று தான்...
நல்லதுக்கே காலம் இல்லங்க என்ற பழமொழியை ஓரமா வச்சிட்டு...
நம்மளுடைய நற்பண்புகளை
கீழ போட்றாம கெட்டியா பிடிச்சுக்கணும்...
அதனால என்ன பிரச்சனை வந்தாலும்
சமாளிக்கணுங்கிற மனநிலையை வளர்த்துக்கணும்....
இதுதான் ஒரே வழி...
ஏன்னா...
உண்மை நேர்மைய கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாமதான்...
உறவுகளை மதிக்கிற பழக்கத்தை கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்...
இப்போ இருக்கிற தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் நாம தான்...
நற்பண்புகள் தான் நம்மளுடைய தனித்துவம்...
அத எதுக்காகவும் மிஸ் பண்ணிடக் கூடாது...
இதையெல்லாம் கத்துக் கொடுத்த
என்னோட ஆசிரியர்களுக்கு
என் உளப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக